அண்ணா சீரியல்: பரணி வைத்த செக்மேட்.. ரிலீஸ் ஆன வெட்டுக்கிளி, கனி எடுத்த முடிவு

Zee Tamil Anna Serial March 11th Episode update: பரணி வைத்த செக்மேட்.. ரிலீஸ் ஆன வெட்டுக்கிளி, கனி எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2024, 03:17 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • சண்முகம் விஷயம் அறிந்து ஆட்டோவை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுகிறான்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
அண்ணா சீரியல்: பரணி வைத்த செக்மேட்.. ரிலீஸ் ஆன வெட்டுக்கிளி, கனி எடுத்த முடிவு title=

Zee Tamil Anna Serial March 11th Episode update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இசக்கி பயந்து கொண்டே முத்துப்பாண்டிக்கு சாப்பாடு பரிமாற முப்பிடாதி சண்முகத்துக்கு வெட்டுக்கிளியை பிடித்து ஜெயிலில் போட்டு வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதிகம் விரும்பி பார்க்கப்படும், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அண்ணா சீரியலில், இன்றைய எபிஸோடில் வெளியில் போன சண்முகம் விஷயம் அறிந்து ஆட்டோவை ஸ்டேஷனுக்கு விடுகிறான். ஸ்டேஷனுக்குள் நுழையும் சண்முகம் முத்துப்பாண்டியின் சட்டையை பிடித்து வெட்டுக்கிளியை எதுக்கு ஜெயில்ல போட்டு இருக்க என கேட்க நீதானே அவனை விட்டு என்ன அடிக்க வச்சு என்னுடைய பிஸ்டலை திருட்டுனது என்று கேட்க இதைக் கேட்டு கனி அதிர்ச்சி அடைகிறாள்.  

அதன் பிறகு சண்முகம் தேவை இல்லாம ஒருத்தன் பிடித்து ஜெயில்ல போட்டு இருக்காங்கப்பா டிஎஸ்பிக்கு போன் போட்டு சொல்றேன் என போன் பண்ண முயற்சி செய்ய தடுத்து நிறுத்தும் பரணி இந்த பிரச்சனையை வளர விடக்கூடாது என சொல்கிறாள்.

வேணும்னா எஃப் ஐ ஆர் போடு, ஆதாரமே இல்லாமல் ஒருத்தனை ஜெயில்ல போடாத என்று சொல்ல முப்பிடாதே எஃப் ஐ ஆர் போட்டா நமக்கு தான் பிரச்சனை என்று சொல்ல முத்துப்பாண்டி அதை புரிந்து கொண்டு வெட்டுக்கிளியை ரிலீஸ் செய்கிறான். 

மேலும் படிக்க | படுக்கையறையில் படுத்தவாறு போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! புகைப்படங்கள் வைரல்..

வெளியே வந்த வெட்டுக்கிளி சண்முகத்திடம் பயங்கரமா அடிச்சுட்டாரு என ஜெயிலில் நடந்த விஷயங்களை சொல்லி வருத்தப்பட கனி அதிர்ச்சியில் பிஸ்டலை எடுத்தது நான்தான் என்ற உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறாள். வீட்டுக்கு வந்த கனி இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிஞ்சா அண்ணனுக்கு தான் பிரச்சனை அவருக்கு தெரியாமலேயே ஏதாவது செய்யணும் என முடிவு எடுத்து உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணாசீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Oscar 2024 List : ஆஸ்கர் விருதுகளின் வெற்றியாளர்கள் யார்? எந்த படத்திற்கு என்ன விருது கிடைத்தது? முழு லிஸ்ட்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News