’தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்தேன்’ ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு

கனல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை தமன்னாவின் நிறம் குறித்து நடிகர் ராதாரவி கிண்டலாக பேசினார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 29, 2022, 12:22 PM IST
  • கனல் பட விழாவில் கலந்து கொண்ட ராதாரவி
  • தமன்னாவின் நிறம் குறித்து கிண்டல்
  • விக்ரம் படம் வெற்றிக்கு கமல்ஹாசனுக்கு வாழ்த்து
’தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்தேன்’ ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு  title=

தி நைட்டிங்கேல் புரொடக்ஷன் தயாரிப்பில்  சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் லீட் ரோலில் நடித்திருக்கும் நாயகி காவ்யா, நடிகர் ராதாவி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ராதாரவி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தற்காக நன்றி தெரிவித்தார். நல்ல கதை மற்றும் கேரக்டர் என தெரிந்ததால் நடித்ததாக கூறிய அவர், கனல் படம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

நடிகை தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்ததாகவும், ஒரு இடத்தில் கூட கருப்பு நிறமே இல்லை எனக் கூறிய அவர், அவரைபோலவே நடிகை காவ்யாவும் இருப்பதாக கூறியுள்ளார். இப்போதும் நடிப்புக்கு ஏராளமானோர் வந்துவிட்டார்கள். நானும் நானூறு படம் நடிச்ச பிறகும் நானே சிலரிடம் நான் நடிப்பேன்னு சொல்ல வேண்டியிருக்கு என கூறினார். தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவம் தான் சிறந்தது. இப்போது ஓடிடிக்கள் கொடுப்பார்கள், பின்னர் அவர்களே பிக்ஸ் பண்ணத் தொடங்குவார்கள். பெரிய நடிகர்கள் இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயம் இது நடக்கும் எனக் கூறினார். 

மேலும் படிக்க | இயக்குநர் மிஷ்கினின் புது அவதாரம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

தொடர்ந்து பேசும்போது, " நான் கன்னட படத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். கமல் தான் என்னை முதன்முதலாக தமிழுக்கு அழைத்து வந்து மன்மதலீலை படத்தில் நடிக்க வச்சார். கமலுக்கு எவ்ளோ திறமை பாருங்க. இப்போது கூட நம்பர் ஒன் கலெக்ஷன் எடுத்தாரு பாருங்க அதுதான் திறமை. நானும் நானூறு படங்களில் நடிச்சிருக்கேன்.ஆனால் நானும் நடிப்பேனும் இன்னும் எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டியிருக்கு. 

பெண்கள் என்னை திட்டினால் தான் எனக்கு சம்பளம். ஏனென்றால், குடும்பத்தை கெடுக்கிறேன். சிலரோட வாழ்க்கையை கெடுக்கிறேன். ஆனால் என்னை நடிகனாக அவர்கள் பார்க்கிறார்கள். நல்ல நடிக்கிறேன் என்று கூட சொல்கிறார்கள். அதுபோதும் எனக்கு. ஏர்போர்ட்டில் தமன்னாவை சுற்றி சுற்றிப் பார்த்தேன். ஒரு இடத்தில் கூட கருப்பு இல்லை. அதேமாதிரி இப்படத்தில் நடித்திருக்கும் காவ்யாவும் இருக்கிறார். பெரிய நடிகர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்கிறேன். ஓடிடிக்கள் இப்போது கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் படத்துக்கு பிக்ஸ் பண்ணும் நிலைமை வரும். தியேட்டர்களில் படம் பார்ப்பது மட்டுமே சிறந்தது" எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்க | சூர்யாவை அழைக்கும் ஆஸ்கர் - தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News