வதந்தியை நம்ப வேண்டாம்- பி.சுசீலா

Last Updated : Nov 3, 2017, 12:46 PM IST
வதந்தியை நம்ப வேண்டாம்- பி.சுசீலா title=

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளவர் பாடகி பி.சுசிலா.

இவர் இன்று இறந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. இதையடுத்து இதுகுறித்து பி.சுசீலா விளக்கம் அளித்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள அவர் “நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

பி.சுசீலா கடந்த ஒரு மாத காலமாக டெலசோ மாகாணத்தில் இருந்து வருகிறார். 

Trending News