'மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்கள்' சூப்பர்ஸ்டாருக்கு சர்ச்சை தம்பதியின் கோரிக்கை

மகனையும், மகளையும் சேர்த்து வைக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனுஷின் பெற்றோர் என நீதிமன்றத்தை நாடியுள்ள கதிரேசன் தம்பதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2022, 03:59 PM IST
'மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்கள்' சூப்பர்ஸ்டாருக்கு சர்ச்சை தம்பதியின் கோரிக்கை  title=

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்துக்கு கண், காது, மூக்கு வைத்து பலரும் பல கதைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். போதாக்குறையாக இந்த லிஸ்டில் நடிகர் தனுஷ் தனது மகன் எனக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள சர்ச்சை தம்பதியும் சேர்ந்துள்ளனர்.

ALSO READ | தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து; டிபியை மாற்றிய சௌந்தர்யா

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி. இவர்களது மூத்த மகன் கலையரசன் பிளஸ் ஒன் படிக்கும் போது காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் எனவும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ALSO READ | நடிகர் விஜய் 7 ஆண்டுகள் மனைவியை பிரிந்திருந்தாரா? ஒரு ரசிகனின் குரல்

இந்நிலையில், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினர் தற்பொழுது பிரிய போவதாக தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியை பார்த்து கதிரேசன் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வரும் அவர்கள், தங்களது மகன் (தனுஷ்) மற்றும் (ஐஸ்வர்யா) மருமகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களின் எதிர்காலத்திணை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினரை சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மீனாட்சி அம்மாள் கூறும்போது நாங்கள் வயதான காலத்தில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம், கலையரசா நீ உனது பிள்ளைகள், மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News