புஷ்பா-2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தால் வந்த ஆபத்து!

'புஷ்பா-2' படத்தில் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றுவதற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 17, 2022, 07:47 AM IST
  • புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • இரண்டாம் பாகத்தில் பகத் பாசில் நடிக்க இருக்கிறார்.
  • இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
புஷ்பா-2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தால் வந்த ஆபத்து! title=

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'புஷ்பா' படத்தின் வெற்றிக்கு பின்னர் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  'புஷ்பா-2' படம் குறித்த பலவித செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது.  இப்படத்தின் முதல் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார், இவரது இசையில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.  'புஷ்பா-2' படத்தில் டிஎஸ்பி-க்கு பதிலாக வேறு யாரையாவது இசையமைப்பாளராக மாற்றலாம் என்கிற கோரிக்கையும் வைத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஒரு பாடலுக்கு 25 நாட்கள் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!

ரசிகர்கள் இவ்வாறு அதிருப்தி தெரிவிப்பதற்கு காரணம் 'தி வாரியர்' படம் தான், ஜூலை-14ம் தேதி லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் 'தி வாரியர்'.  ராம் பொத்தினேனி, க்ரிதி ஷெட்டி, ஆதி, நதியா, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர்.  இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது, படத்தில் இடம்பெற்ற ஆக்ஷன் காட்சிகள் சில பாராட்டை பெற்றது.  ஆனால் படத்தின் இரண்டாம் பகுதி கொஞ்சம் சலிப்படைய செய்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்த படத்தில் பெரும்பாலானோர் குறை சொல்வது பின்னணி இசை தான், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.  படத்தின் பிஜிஎம் அவ்வளவு ரசிக்கும்படியானதாக இல்லை, மியூஸிக்கில் டிஎஸ்பி ஸ்கோர் செய்ய தவறிவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பெரும்பாலும் படத்திற்கு பிஜிஎம் தான் பக்கபலமாக அமையும், சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படத்தின் பிஜிஎம் கூஸ்பம்ப்ஸாக இருந்தது, அனிருத் கைவண்ணத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.  ஆனால் இசையமைப்பாளர் டிஎஸ்பி பத்து வருடங்களுக்கு முன்னர் செய்ததை தான் இப்போது செய்திருக்கிறார் என்று பலரும் குறை கூறி வருகின்றனர்.  அப்படி இருக்கையில், புஷ்பா-2 படத்தில் இவர் சொதப்பிவிடுவாரோ என்று ரசிகர்களுக்கு அச்சம் எழுந்துள்ளது.  இருப்பினும் சிலர் இசையமைப்பாளர் டிஎஸ்பி 'புஷ்பா-2' படத்தில் சிறப்பாக தனது முயற்சியை செய்து வெற்றி காண்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அஞ்சான் பார்ட் 2-வா 'தி வாரியர்'? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News