நடிகை சாய் பல்லவி 10 வருடங்களாக காதலிக்கும் நபர்! யார் தெரியுமா?

Actress Sai Pallavi Love : நடிகை சாய் பல்லவி, தனது காதல் வாழ்க்கை குறித்து கொடுத்துள்ள ஒரு பேட்டி தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 10, 2024, 12:06 PM IST
  • சாய் பல்லவி காதலிக்கும் நபர்
  • 10 வருட காதலாம்!
  • யார் தெரியுமா?
நடிகை சாய் பல்லவி 10 வருடங்களாக காதலிக்கும் நபர்! யார் தெரியுமா?  title=

Actress Sai Pallavi Love : தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், சாய் பல்லவி. பிரேமம் படம் மூலம் பிரபலமான இவர், தற்போது மலையாளத்திலும் பிற தென்னிந்திய மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். 

பான் இந்திய அளவில் கலக்கும் தமிழ் பொண்ணு சாய் பல்லவி!

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக பலருக்கும் அறிமுகமானார். இதில் நிவின் பாலியின் காதலிகளுள் ஒருவராக வந்த இவர், மேக்-அப் ஏதுமின்றி இயல்பாக நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவருக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. துல்கர் சல்மான், நானி, தனுஷ், பகத் பாஸில், நாக சைதன்யா உள்ளிட்ட பல தென்னிந்திய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சாய்பல்லவி. 

மேலும் படிக்க | ராமாயணம் ஸ்டில்ஸ் லீக்.. அழகே பொறாமைப்படும் பேரழகியாக சாய் பல்லவி

சர்ச்சைகளில் சிக்காதவர்..! 

திரையுலகில் இருக்கும் நடிகைகள் பலரை சுற்றி எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சை சுழன்று கொண்டே இருக்கும். நயன்தாரா, திரிஷா, சமந்தா, தமன்னா என எந்த நடிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், நடிகை சாய் பல்லவி இதுவரை எந்த காதல் சர்ச்சைகளிலும் சிக்காதவர். அமரன் படத்தின் பூஜை நிகழ்ச்சியின் போது அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அருகே மாலை கழுத்துடன் நின்றிருந்தார். இதை தவறாக புரிந்து கொண்ட வெளியூர் மீடியாக்கள், சாய்பல்லவிக்கு திருமணம் ஆகி விட்டதாக செய்திகளை பரப்பினர். இதற்கு சாய் பல்லவி பின்னர் விளக்கம் அளித்தார். இது தவிர, அவர் வேறு எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை. 

10 வருட காதல்: 

நடிகை சாய் பல்லவி, தனது காதல் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அதில், தான் பத்து வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருக்கிறார். அவர் குறிப்பிட்டு இருந்த நபர் வேறு யாரும் இல்லை, மகாபாரத கதையில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யு தான். இதைக் கேட்டு ரசிகர்கள், “யாரோ நடிகரை சொல்லப் போகிறார் என்று பார்த்தால், அப்படி சொல்லிவிட்டாரே” என்று கருத்துகளை கூறி வருகின்றனர். 

இப்போது என்ன செய்கிறார்?

நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்ததை அடுத்து, இப்போது அடுத்தக்கட்டமாக இந்தி திரையுலகிற்கும் சென்றிருக்கிறார். பாலிவுட்டில் இராமாயணத்தை வைத்து உருவாகும் படத்தில் இவர் சீதையாக நடிக்கிறார். ராமனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இந்த படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இந்த படத்தின் லுக் டெஸ்ட் பணியின் பாேது சில புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் வைரலானது. இந்த படத்திற்கு முன்னர் அமரன் படத்தில் கமிட் ஆன சாய் பல்லவி, அதில் நடித்து கொடுத்துவிட்டார். இப்படம், வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இது காதல் திருமணம் ஆகும்.

மேலும் படிக்க | சிம்பிள் பியூட்டி சாய் பல்லவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News