PPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி: நினைத்தது நடக்கவில்லை!!

PPF Limit: ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் திட்டத்தில் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச முதலீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் மக்களின் இந்த எதிர்பார்ப்பு அப்படியேதான் உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 3, 2023, 11:41 AM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி அதாவது பிபிஎஃப் திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது.
  • இம்முறை பட்ஜெட்டில் பிபிஎப் திட்ட வரம்பை உயர்த்தி அரசு அறிவிக்கக்கூடும் என மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
  • பிபிஎஃப் திட்டத்தில் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச முதலீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
PPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி: நினைத்தது நடக்கவில்லை!! title=

பிபிஎஃப் வரம்பு: நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற அரசு முயற்சித்துள்ளது. அதே சமயம், இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு பல புதிய திட்டங்களையும் தொடங்கியுள்ளது. மக்களுக்காக அரசு நடத்தும் பழைய திட்டங்களில் சில முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், அதில் எந்த மாற்றத்தையும் அரசு செய்யவில்லை.

பிபிஎஃப் திட்டம்

இந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், மோடி அரசாங்கத்தின் இந்த ஆட்சிக்காலத்தில் இறுதி முழு பட்ஜெட்டாக இருந்தது. ஆகையால், இந்த பட்ஜெட் குறித்து மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளும் இருந்தன. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி அதாவது பிபிஎஃப் திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இம்முறை பட்ஜெட்டில் பிபிஎப் திட்ட வரம்பை உயர்த்தி அரசு அறிவிக்கக்கூடும் என மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். 

ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் திட்டத்தில் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச முதலீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் மக்களின் இந்த எதிர்பார்ப்பு அப்படியேதான் உள்ளது. 

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் பெண்களுக்கான சூப்பர் திட்டம்! 7.5 % வட்டி வழங்கும் புதிய சேமிப்பு திட்டம்!

பிபிஎஃப் முதலீடு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்பிலிருந்து 2023 பட்ஜெட் உரையில் PPF தொடர்பாக எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் எதிர்பார்ப்பும் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது, ​​பிபிஎஃப்-ல் முன்பு இருந்த அதே பலன், எதிர்காலத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஒரு நிதியாண்டில் பிபிஎஃப்-இல் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1.5 லட்சம் ரூபாயாகவே உள்ளது. 

ppf

வரி விலக்கு

இது தவிர, தற்போது பிபிஎஃப்-க்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பிபிஎஃப் திட்டத்தில் கிடைக்கும் வரிச் சலுகையும் முன்பு போலவே இருக்கும். மேலும் மக்கள் முன்பு போலவே பிபிஎஃப் திட்டத்திலிருந்து வரி விலக்கு பெற முடியும்.

மேலும் படிக்க | வங்கிகளை விட அதிக வட்டி! லாபம் தரும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பான திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News