சனிப்பெயர்ச்சி 2022: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

ஜோதிடத்தில், சனி ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சனி தேவனின் கோபத்திற்கு ஆளானால், வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக கஷ்டங்கள் வரும் என்று நம்பப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2022, 06:36 PM IST
சனிப்பெயர்ச்சி 2022:  எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள் title=

ஜோதிடத்தில், சனி ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சனி தேவனின் கோபத்திற்கு ஆளானால், வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக கஷ்டங்கள் வரும் என்று நம்பப்படுகிறது. 

சனி பகவான் ராசியை மாற்றும் போதெல்லாம், அது ஒரு நபரின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. சனி தேவன் 29 ஏப்ரல் 2022 அன்று ராசியை மாற்றப் போகிறார். இந்த ராசி மாற்றத்தின் போது சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைவார். சனி தேவன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சனி மாற்றம்  இரு ராசிகளுக்கு நல்ல செய்தியை கொடுக்க உள்ளது

சனி ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருக்கிறார். சனி ஒரு ராசியில் நான்காவது அல்லது எட்டாவது வீட்டில் அமர்ந்தாலும் தாக்கம் ஏற்படும்.  சனி மகர ராசியில் இருப்பதால் மிதுன ராசிக்கு எட்டாம் வீட்டிலும், துலாம் ராசிக்கு நான்காம் வீட்டிலும் வருகிறார்.

மேலும் படிக்க | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!

மிதுனம்-துலாம் ராசிக்காரர்கள்  செய்ய வேண்டியவை

மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் இந்த இரண்டரை மாத காலத்தில் கடினமாக உழைக்க வேண்டும். சனியின் தாக்கத்தினால் தற்போதுள்ள போராட்டங்கள் வேகமடையும் என்பதால்எச்சரிக்கை அவசியம். எனினும் நிதானத்துடன், அதே நேரத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் பலன்கள் அதிகம்.

கடந்த நாட்களின் தோல்வியால் விரக்தியில் உட்கார வேண்டாம். புதிய ஆற்றலுடன் உங்கள் வேலையைத் தொடங்குங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவதே பணி. அகங்காரம் என்ற உணர்வு வரக்கூடாது என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

மிதுன ராசிக்காரர்கள் செய்ய வேண்டியவை

சனி நீதியின் கடவுள் அந்த செயல்களின் அடிப்படையில், ஒருவரை தண்டிக்கிறார். மிதுன ராசிக்காரர்களின் அடிப்படை இயல்பு மகிழ்ச்சியாக இருப்பதுதான். நல்ல விஷயங்களைப் பேசி, நகைச்சுவையாக பழகி, வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் அதிக மன அழுத்தம் அல்லது மோதல் போன்ற சூழ்நிலையை எதிர் கொண்டால் அவர்களின் அடிப்படை இயல்பு மாறி விடுகிறது. 

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

எனினும் வரும் இரண்டரை மாதங்களில் எந்த வேலை செய்தாலும் அதை மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் செய்ய வேண்டும். உங்கள் வேலையைச் சுமையாகக் கருதாதீர்கள். அலுவலகத்தில் எந்த வேலை கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் செய்ய வேண்டும்.

துலாம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டியவை

துலாம் ராசிக்காரர்களுக்கு, இந்த  பெயர்ச்சி காலத்தில் வலங்கள் அதிகரிக்கும். சில மாற்றங்களைச் செய்யவோ அல்லது நீண்ட காலமாக வீட்டை மாற்றவோ விரும்பினால், இந்த இரண்டரை மாதங்களில் மாற்றங்களைச் செய்யலாம். நீங்கள் வாகனத்தை மாற்ற நினைத்தால், இந்த நேரத்தில் வாகனத்தையும் மாற்றலாம். குடும்பத்தில் உறவில் விரிசல் ஏற்பட்டவர்களும் இப்போது இயல்பு நிலைக்கு வரும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈகோவை விட்டுவிட்டு, அன்பை இதயத்தில் அதிகம் வைத்திருக்க வேண்டும். போட்டிக்குத் தயாராகும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நடக்கும் தேர்வில் அதிர்ஷ்டவசமாக எளிய கேள்விகள் கேட்கப்படும்.

மேலும் படிக்க | நண்பராக இருந்தாலும் அலுவலகத்தில் எச்சரிக்கை தேவைப்படும் 3 ராசிக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News