சனிப்பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் ஆரம்பம்

Sani Peyarchi 2022: இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார 3 ராசிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2022, 05:42 PM IST
  • சனி பகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும்.
  • தனுசு ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வந்த பழைய நோயிலிருந்தும் விடுதலை பெறலாம்.
சனிப்பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் ஆரம்பம் title=

சனிப்பெயர்ச்சி 2022: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. இது மனித வாழ்க்கையிலும் பூமியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கர்ம பலன்களைத் தரும் சனிபகவான் ஏப்ரல் 29-ம் தேதி தனது மூல ராசியான கும்ப ராசியில் பிரவேசித்துள்ளார்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறார். மேலும் அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் நுழைந்துள்ளார். மேலும் அவர் ஜூலை 12 ஆம் தேதி வரை இங்கேயே இருப்பார். 

சனி பகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார 3 ராசிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்: 
மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். சனிபகவான் மேஷ ராசிக்காரர்களின் 11வது வீட்டில் நுழைந்துள்ளார். இது லாபம் மற்றும் வருமானத்தின் ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த காலத்தில் இவர்கள் வியாபாரத்தில் அதிக பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் வரும். 

மேலும், இந்த நேரத்தில் பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மறுபுறம், சனி பகவான் உங்கள் பத்தாவது வீட்டின் அதிபதியாகவும் இருக்கிறார். ஆகையால், இந்த நேரத்தில் தொழிலில் முன்னேற்றம் அடையலாம். புதிய வேலை வாய்ப்பு வரலாம். இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. வணிக பயணத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். முதலீடு செய்ய சரியான நேரம் இது. இதனுடன், நீண்ட நாட்களாக படுத்திவந்த நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் ஜாதகத்தில் சனிபகவான் எந்த நிலையில் இருக்கிறார் என்பது இங்கே பார்க்க வேண்டிய விஷயமாகும்.

மேலும் படிக்க | குரு - சுக்கிரன் கூட்டணியினால் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தான் 

ரிஷபம்: 
ரிஷப ராசியின் பத்தாம் வீட்டில் சனி-யின் பெயர்ச்சி நடந்துள்ளது. இது பணிபுரியும் இடத்துக்கான ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். தொழிலில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யோசனைகளால் வெற்றி பெறுவீர்கள். அதே சமயம் பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

மேலும், சனி கிரகம் உங்கள் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இதனுடன், நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகளும் நடந்துமுடியும். ரிஷப ராசி சுக்கிரனால் ஆளப்படுகிறது. ஜோதிடத்தின் படி, சனி பகவான் மற்றும் சுக்கிரனின் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே, சனியின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு: 
ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் பெயர்ச்சி ஆனதிலிருந்து உங்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஆகையால் தனுசு ராசிக்காரர்களின் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். மறுபுறம், சனி பகவான் உங்கள் மூன்றாவது வீட்டில் அதாவது வலிமைமிக்க வீட்டிற்கு மாறியுள்ளார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் வலிமையும் தைரியமும் அதிகரிக்கும். இத்துடன் பணியிடத்தில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். 

தனுசு ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வந்த பழைய நோயிலிருந்தும் விடுதலை பெறலாம். சனி பகவான் தொடர்பான பொருட்களின் வியாபாரம் (இரும்பு, எண்ணெய், மது) செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். மேலும், உங்கள் தடைபட்ட வேலைகள் இந்த நேரத்தில் முடிக்கப்படும். இந்த நேரத்தில் உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில், எந்த நிலையில் அமர்ந்திருக்கிறார் என்பதை இங்கே பகுப்பாய்வு செய்வது அவசியம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 75 நாட்களில் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News