Old Pension Scheme: இவர்களுக்கு கிடைக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள், மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

Old Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) நிறுத்திவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 27, 2023, 06:59 PM IST
  • மத்திய ஆயுதப்படை போலீஸ் படையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க உத்தரவு.
  • டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.
  • எட்டு வாரங்களுக்குள் தேவையான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.
Old Pension Scheme: இவர்களுக்கு கிடைக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள், மகிழ்ச்சியில் ஊழியர்கள்!! title=

மத்திய ஆயுதப் படைகள்: நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீண்டும் கொண்டு வருவது பற்றி தொடர்ந்து பல விவாதங்கள் நடந்து வருகின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) நிறுத்திவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. சத்தீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

‘ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம்’

மத்தியப் பிரதேசத்திலும் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அறிவித்துள்ளார். ஆனால், அதை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தெளிவான பதில் அளிக்கவில்லை. நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பழைய ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து அறிக்கை அளித்தார். இதற்கிடையில், மத்திய ஆயுதக் காவல் படையின் (சிஏபிஎஃப்) அனைத்துப் பணியாளர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு வாரங்களில் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவு

டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், மத்திய ஆயுதப்படை போலீஸ் படையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எட்டு வாரங்களுக்குள் தேவையான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | பம்பர் செய்தி!! இனி இந்த ஊழியர்களுக்கு மீண்டும் Old Pension Scheme: அறிவிப்பு வெளியானது! 

அலுவலக குறிப்பாணை நிராகரிக்கப்பட்டது

நிதி அமைச்சகத்தின் 2003 அறிவிப்பு மற்றும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் 2020 இன் அலுவலக குறிப்பாணை (OM) ஆகியவை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1, 2004 தேதியிட்ட விளம்பரத்தின்படி, மத்திய துணை ராணுவப் படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் பறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்ற உத்தரவு 

மத்திய துணை ராணுவப் படைகள் (CAPF) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தகவல் அளித்துள்ளது. இது ஆயுதப்படை என்பதால், இவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினர் பெரும் நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சுகன்யா சம்ரித்தி யோஜனா: இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நிறுத்துங்கள்! பெரிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News