ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்தாச்சி குட் நியூஸ்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

PMGKAY: அமைச்சரவைக் கூட்டம் குறித்து தகவல் அளித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY) ஜனவரி 1, 2024 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 30, 2023, 07:53 AM IST
  • 5 கிலோ உணவு தானியங்களை அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது.
  • ஒவ்வொரு மாதமும் 35 கிலோ தானியங்கள் வழங்கப்படுகிறது.
  • PMGKAY 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்தாச்சி குட் நியூஸ்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

இலவச ரேஷன் திட்டம்: ரேஷன் கார்டு வைத்திருக்கும் 80 கோடி பேரில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசால் நடத்தப்படும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் (Free Ration Scheme) திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் கீழ் ஏழை மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

31 டிசம்பர் 2028 வரை பலன் கிடைக்கும்:
அமைச்சரவைக் கூட்டம் குறித்த தகவலை அளித்து, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY - Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) ஜனவரி 1, 2024 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முன்பு 31 டிசம்பர் 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தத் திட்டத்திற்காக சுமார் ரூ.11.8 லட்சம் கோடி செலவிடப்படும் என்று அமைச்சர் கூறினார். உலகளாவிய தொற்றுநோய் நிவாரண நடவடிக்கையாக PMGKAY 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வங்கி கணக்கில் இவ்வளவு பணத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி நோட்டீஸ் வரலாம்!

இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தேர்தல் பேரணியில் அறிவிக்கப்பட்டது:
இந்த திட்டத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் மானிய விலையில் 5 கிலோ உணவுப் பொருட்களுடன், ஒவ்வொரு பயனாளிக்கும் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பலமுறை நீட்டித்த பிறகு, PMGKAY இலவச தானிய உத்தரவாதத் திட்டம் டிசம்பர் 2022 இல் NFSA இன் கீழ் கொண்டுவரப்பட்டது. சமீபத்தில், சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பேரணியில், இலவச உணவு தானிய திட்டம் தொடர்பாக, ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்கள் பயனடைகின்றனர்:
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் NFSA - National Food Security Act இன் கீழ் உள்ளன. அமைச்சரவையின் இந்த முடிவை, 'நாட்டின் பின்தங்கிய மக்களுக்கு புத்தாண்டு பரிசு' என, அரசு அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். தானியங்களுக்காக பயனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. PMGKAY 2020 இல் கோவிட் தொற்றுநோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ், NFSA ஒதுக்கீட்டின் கீழ் தனிநபர்களுக்கு 5 கிலோ உணவு தானியங்களை அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது.

தற்போது, ​​தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், பயனாளிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.1-3 என்ற அளவில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. அந்தோத்யா அன்ன யோஜனா (AAY - Antyodaya Anna Yojana) குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 35 கிலோ தானியங்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஒய்வூதியம் பெறுவோர் ஹை அலர்ட்! நாளை கடைசி தேதி.. உடனே இதை செய்துவிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News