மகாசிவராத்திரியில் கிரகங்களின் அற்புத சேர்க்கை: இந்த ராசிகளுக்கு அமோக நன்மை கிடைக்கும்

Mahashivratri 2022: இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று கிரகங்களின் சிறப்பு சேர்க்கை ஏற்பட உள்ளது. சிவ பெருமானின் பேரருள் எந்த 4 ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது என இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2022, 05:07 PM IST
  • மேஷ ராசிக்காரக்களுக்கு ஈசனின் தனிச்சிறப்பு வாய்ந்த அருள் கிடைக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்வில் இனிமை இருக்கும்.
  • மகர ராசியிலே ஒரு அற்புதமான கிரக சேர்க்கை உருவாகி வருகிறது.
மகாசிவராத்திரியில் கிரகங்களின் அற்புத சேர்க்கை: இந்த ராசிகளுக்கு அமோக நன்மை கிடைக்கும் title=

இந்து சம்பிரதாயத்தில் சிவ பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள விழாக்களில் மகாசிவராத்திரி விழா மிகவும் சிறப்பம்சம் வாய்ந்ததாகும். இந்த திருநாளன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சிவபெருமானை பல்வேறு வடிவங்களில், பல்வேறு முறைகளில் வழிபடுகிறார்கள். 

இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று கிரகங்களின் சிறப்பு சேர்க்கை ஏற்பட உள்ளது. மகாசிவராத்திரி நாளில், சனி பகவானின் ராசியான மகர ராசியில், சனி, புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய ஐந்து கிரகங்களும் சஞ்சரிப்பார்கள். சூரியனும் வியாழனும் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்கள். 

சில சுப கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். மஹாசிவராத்திரியில் சிவ பெருமானின் பேரருள் எந்த 4 ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது என இந்த பதிவில் காணலாம்: 

மேஷம்:

மேஷ ராசிக்கு பத்தாம் வீட்டில் கிரகங்களின் சிறப்பு சேர்க்கைகள் நடக்கின்றன. எனவே, இந்த நேரத்தில் மேஷ ராசிக்காரக்களுக்கு ஈசனின் தனிச்சிறப்பு வாய்ந்த அருள் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுப்பெறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். 

நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் முடிவடையும். மஹாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடும் போது சிவப்பு சந்தனம் மற்றும் சிவப்பு மலர்களை பூஜையில் சேர்த்து வழிபடவும். இதனால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்: 
ரிஷப ராசியின் ஒன்பதாம் வீட்டில் அதிர்ஷ்ட கிரகங்களின் சிறப்பு சேர்க்கை உருவாகிறது. இந்த நேரத்தில், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். 

வியாபாரத்தில் திடீர் பண வரவு ஏற்படும். மஹாசிவராத்திரி நாளில் கரும்புச்சாறு மற்றும் பால் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது விசேஷமாகும். இவ்வாறு செய்வதால், சிவ பெருமானின் அருளால் நீங்கள் நினைத்தது நடக்கும். 

மேலும் படிக்க | மகா சிவராத்திரி முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்

துலாம்:
துலா ராசியின் நான்காம் இடத்தில் அதாவது மகிழ்ச்சி மற்றும் தாய் ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை உருவாகி வருகிறது. துலா ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருள் சேர்க்கையால் இன்பம் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பயணம் நடக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மஹாசிவராத்திரி அன்று சிவ பெருமானின் பூஜையில் தேனை சேர்த்துக்கொள்வது விசேஷ பலன்களைத் தரும். 

மகரம்:

மகர ராசியிலே ஒரு அற்புதமான கிரக சேர்க்கை உருவாகி வருகிறது. அதனால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மகர ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். இன்னும் திருமணம் ஆகாதவர்களின் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரக்கூடும். 

சிவபெருமானை மகிழ்விக்க மகாசிவராத்திரி அன்று பாலில் கருப்பு எள்ளைக் கலந்து ருத்ராபிஷேகம் செய்யலாம். இந்த வகையில் செய்யப்படும் அபிஷேகம் விசேஷ பலன்களை அளிக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2022: சிவனின் அருளை முழுமையாக பெற செய்ய வேண்டியவை..!! 

மேலும் படிக்க | மஹாசிவராத்திரி தினத்தில் சிவ பெருமானுக்கு பிடித்த ‘இந்த’ நிற ஆடை அணிவது சிறப்பு! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News