இத மட்டும் பாலோ பண்ணுங்க! ஏசியே வேண்டாம்! வீட்டை குளுகுளுனு வைக்கலாம்!

வீடுகளில் ஏசி-களை வைக்கமுடியாதவர்கள் தங்களது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க சில எளிய குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.   

Written by - RK Spark | Last Updated : May 17, 2023, 04:58 PM IST
  • ஏசி இல்லாமல் அறையை குளிர்ச்சியாக வைக்க வீட்டின் ஜன்னல்கள் மூடி வைத்திருப்பது நல்லது.
  • நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத அறைகளின் கதவுகளை மூடி வைப்பது நல்லது.
  • வெயில் காலத்தில் மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இத மட்டும் பாலோ பண்ணுங்க! ஏசியே வேண்டாம்! வீட்டை குளுகுளுனு வைக்கலாம்! title=

கோடைக்காலம் வந்துவிட்டது, மக்களை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகின்றது.  ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.  இந்த கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இளநீர், அதிக தண்ணீர், தர்பூசணி போன்ற நீர்சத்து நிறைந்த பழங்கள் என பலவற்றையும் மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.  பலரும் தங்களது வீடுகளில் ஏசி-களை பொருத்தி வீட்டை குளுமையாக வைத்திருக்கின்றனர், ஆனால் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வீட்டில் ஏசி-களை பொருத்துவதில் சிரமம் ஏற்படும்.  அப்படி வீடுகளில் ஏசி-களை வைக்கமுடியாதவர்கள் தங்களது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க சில எளிய குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.  இப்போது வீட்டில் ஏர் கண்டிஷனர் வைக்காமலேயே வீட்டை எப்படி குளுமையாக மாற்றலாம் என்பதை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

1) வெப்பம் மிகுதியாக இருக்கும் காலங்களில் ஏசி இல்லாமல் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க நீங்கள் செய்யக்கூடிய எளிய விஷயம், உங்கள் வீட்டின் ஜன்னல்கள் மூடி வைத்திருப்பதே.  புதிய காற்றை விரும்புவோருக்கு, இந்த முறை சற்று அசௌகரியமானதாக தோன்றலாம்.  வீட்டிலுள்ள ஜன்னல்களை மூடுவதன் மூலம் வெளியே இருக்கும் சூடான காற்று வீட்டினுள்ளே செல்வது தடுக்கப்படும், ஜன்னல்களை மூடி வைப்பது உங்கள் வீட்டின் உட்புறம் சற்று குளிர்ச்சியாக இருக்க உதவும்.  ஜன்னல்கள் வழியாக உங்கள் வீட்டிற்குள் நுழையும் சூரிய ஒளியில் 76% வெப்பமாக மாறுவதால், அவை மூடியிருப்பது நல்லது.  எரிசக்தி துறையானது, உள்ளே வெப்பத்தை குறைக்க வெள்ளை-பிளாஸ்டிக் பின்னணியுடன் கூடிய நடுத்தர நிற திரைச்சீலைகளை பரிந்துரைக்கிறது,  மேலும் சிலர் ஜன்னல்களை மூடி வைத்து சூரிய ஒளியை முழுவதுமாக தடுக்க பிளாக்அவுட் திரைச்சீலைகளை தேர்வு செய்கிறார்கள்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், இம்மாதம் இருமுறை ரேஷன் வினியோகம்..

2) உங்கள் பெரும்பாலான நேரத்தை ஒரே அறையில் செலவிடுகிறீர்கள் என்றால், படுக்கையறைகள் அல்லது குளியலறைகள் போன்ற நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத அறைகளின் கதவுகளை மூடி வைத்திருப்பது நல்லது.  வீட்டின் சில பகுதிகளை மூடுவது குளிர்ந்த காற்றை ஒரே பகுதியில் குவித்து வைக்க உதவுகிறது மற்றும் அறையை விரைவாக குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது.

3) மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்துபவராக இருந்தால் அதனை வெயில் காலத்தில் மட்டும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.  ஏனென்றால் அந்த அடுப்பிலிருந்து 400 டிகிரி வெப்பம் வெளியாகி அறையை சூடாக்குகிறது, பர்னர்கள் சில வெப்பத்தை வெளியிடுகின்றன.  எனவே நீங்கள் எந்த சமையலறை உபகரணங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.  அதற்குப் பதிலாக வெளிப்புற கிரில்லிங் அல்லது வெப்பம் அதிகம் தேவைப்படாத உணவுகளை தேர்வு செய்யலாம்.  நீங்கள் கண்டிப்பாக அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் அடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றால், இரவில் வெளிப்புற காற்று குளிர்ச்சியடையும் வரை காத்திருந்து அதன் பிறகு பயன்படுத்தலாம்.

4) கோடை காலத்தில் தேவையற்ற வெப்பத்தை கொண்டு வருவது சமையலறை உபகரணங்கள் மட்டும் அல்ல, லைட் பல்புகளும் தான்.  ஒளிரும் விளக்குகள் 90% ஆற்றலை வீணடிப்பதன் மூலம் அதிக வெப்பத்தைத் தருகின்றன, எனவே சிஎஃப்எல் (காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் விளக்குகள்) அல்லது எல்இடி பல்புகளுக்கு மாறுவது உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது அதிக வெப்பத்தை அறைக்குள் கொண்டு வராமல் தடுக்கும்.

5) நீங்கள் ஏர் கண்டிஷனிங் இல்லாத வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், மின்விசிறி உங்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்.  மின்விசிறிகள் காற்றை குளிர்விப்பதை விட காற்றை நகர்த்துவதால் இது அறையிலுள்ள வெப்பத்தை சரிசெய்யும்.  மின்விசிறிகளுடன் குறுக்கு காற்றை உருவாக்குவது குளிர்ந்த காற்றைச் சுழற்றுவதற்கும், சூடான காற்றை வெளியே தள்ளுவதற்கும் சிறந்த வழியாகும்.  உங்கள் வீட்டின் வெப்பமான பகுதியை கண்டுபிடித்து அந்த பகுதியை நோக்கி மின்விசிறியை சுழற்ற வேண்டும்.  மேக்-ஷிப்ட் ஏர் கண்டிஷனருக்கு, மின்விசிறியின் முன் ஒரு கோணத்தில் ஒரு பெரிய ஐஸ் கட்டியை வைக்க முயற்சி செய்யுங்கள், இதன் மூலம் அறையினுள் குளிர்ந்த காற்று கிடைக்கும்.

6) நீங்கள் ஈரப்பதமான காலநிலையில் வாழ்ந்தால், ஈரப்பதம் கோடை வெப்பத்தை இன்னும் மோசமாக உணர வைக்கும்.  ஒரு டிஹைமிடிஃபையர் அறையின் வெப்பநிலையைக் குறைக்காது என்றாலும், வெப்பமான நாட்களை இன்னும் மோசமானதாக மாற்றிவிடும்.  ஈரப்பதம் நமது வியர்வை ஆவியாகும் விகிதத்தைக் குறைப்பதால் , ஈரப்பதமான காலநிலையில் நாம் அடிக்கடி வெப்பமாகவும் வியர்வையாகவும் உணர்கிறோம், எனவே ஈரப்பதமூட்டியில் முதலீடு செய்வது ஈரப்பதமான மாதங்களில் உங்கள் வீட்டை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

7) இரவில் ஜன்னல்களை திறந்து வைத்துக்கொண்டு படுக்கலாம், வெளியில் உள்ள வெப்பம் குறைந்த குளிர்ச்சியான காற்று உங்கள் அரைக்கும் வரும்.  இதனை செய்வதன் மூலம் பணம் எதுவும் செலவு செய்யாமல் வீட்டினுள் குளிர்ச்சியினை அனுபவிக்க முடியும்.  வெளியில் அதிக வெப்பமடைவதற்கு முன், குளிர்ந்த காற்றை உள்ளே வைத்திருக்க, காலையில் ஜன்னல்களை மூடிவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! கோதுமை - அரிசி 1ம் தேதி முதல் நிறுத்தம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News