எச்சரிக்கை: உடனடியாக ஆதாரில் இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் உங்கள் ஆதார் கார்டு விவரங்கள் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 22, 2022, 05:50 AM IST
  • தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • தனிநபரின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆதார் கார்டு மூலம் பல மோசடிகள் நடைபெறுகிறது.
  • மில்லியன் கணக்கிலான தவறான ஆதார் கார்டுகளை கண்டறிந்து யுஐடிஏஐ ரத்து செய்து இருக்கிறது.
எச்சரிக்கை: உடனடியாக ஆதாரில் இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!  title=

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது, தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இவ்வளவு முக்கியத்துவம்  ஆவணமாக உள்ள ஆதார் கார்டு அடிக்கடி ​​இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) தரவுத்தளத்தில் இருந்து சரிபார்க்கப்பட வேண்டும்.  அதாவது பிறந்த தேதி, முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற ஆதார் அட்டையில் தனிநபரின் முக்கியமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வேண்டியது அவசியம்.  மேலும் யுஐடிஏஐ-ன் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் உங்கள் ஆதார் கார்டு விவரங்கள் பொருந்துகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

தனிநபரின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆதார் கார்டு மூலம் பல மோசடிகள் நடைபெறுகிறது, இதுபோன்ற மோசடி குற்றங்களை தடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மில்லியன் கணக்கிலான தவறான ஆதார் கார்டுகளை கண்டறிந்து யுஐடிஏஐ ரத்து செய்து இருக்கிறது, தற்போது மேலும் மோசடிகளை குறைக்க ஆதார் கார்டை சரிபார்க்க யுஐடிஏஐ வலியுறுத்தியுள்ளது.  அதிகாரிகள் மற்றும் மக்கள் அனைவரும் ஆதார் கார்டை சரிபார்க்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது.  ஆதார் கார்டுதாரர் அவர்களது ஆதார் கார்டை சரிபார்க்கும்போது ​​அவர்களது ஆதார் கார்டு செயலில் உள்ளதா அல்லது செயலற்றதாக உள்ளதா என்பது பற்றி அவருக்குத் தெரியும்.  மேலும் கார்டுதாரர்கள் பற்றிய தவறான தகவல்கள் ஏதேனும் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுபற்றியும் தெரியவரும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்

வீட்டிலிருந்தபடியே ஆதார் கார்டை சரிபார்ப்பது எப்படி ?

1) இதனை செய்ய முதலில் யுஐடிஏஐ-ன் அதிகாரபூர்வ தளமான www.uidai.gov.in க்குச் செல்லவும்.

2) இணையதளத்தில் 'ஆதார் சேவைகள்' என்பதன் கீழ் உள்ள 'Verify Aadhaar (AADHAAR) என்பதை கிளிக் செய்யவும்.

3) இப்போது திரையில் தெரியும் புதிய பக்கத்தில் 12 இலக்க ஆதார் எண்ணையும், கேப்ட்சாவையும் உள்ளிடவும்.

4) ஆதார் எண் உண்மையானதாக இருந்தால், 'ஆதார் சரிபார்ப்பு முடிந்தது' என்ற செய்தியை இணையதளம் காண்பிக்கும்.  மேலும் அதில் உங்கள் வயது, மாநில பெயர் மற்றும் மொபைல் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் போன்ற மற்ற தகவல்கள் காண்பிக்கப்படும்.

5) நீங்கள் பலதடவை முயற்சி செய்தும் ஆதார் எண்ணைச் சரிபார்க்கத் தவறினால், உங்கள் ஆதார் எண் இல்லை என்று இணையதள பக்கத்தில் கட்டப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News