8th Pay Commission: காத்திருக்கும் குட் நியூஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் சம்பள உயர்வு

8th Pay Commission: 8 ஆவது ஊதியக்கமிஷன் அமல்படுத்தப்படுமா? அப்படி அமல்படுத்தப்படும் என்றால் இது எப்போது நடக்கும்? இப்படி பல கேள்விகள் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2023, 12:52 PM IST
  • புதிய ஊதியக்கமிஷன்: எப்போது அமல்படுத்தப்படக்கூடும்?
  • 8வது ஊதியக்குழு: ஆண்டுதோறும் சம்பளம் மாறுமா?
  • 8வது ஊதியக்கமிஷனில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்?
8th Pay Commission: காத்திருக்கும் குட் நியூஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் சம்பள உயர்வு  title=

8வது ஊதியக்கமிஷன்: 8 ஆவது ஊதியக் கமிஷன் குறித்து நாடு முழுவதும் பல வித கருத்துக்கள் பரவி வருகின்றன. 8 ஆவது ஊதியக்கமிஷன் அமல்படுத்தப்படுமா? அப்படி அமல்படுத்தப்படும் என்றால் இது எப்போது நடக்கும்? இப்படி பல கேள்விகள் உள்ளன. 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கமும் அதை நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடும் என கூறப்படுகின்றது. அதாவது புதிய ஊதியக்கமிஷனை அரசாங்கம் விரைவில் அமைக்கக்கூடும். அப்படி புதிய ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அகவிலைப்படியுடன் சம்பளம் தொடர்ந்து அதிகரிக்கும். ஆனால், 8வது ஊதியக்கமிஷனின் அமைப்புக்கு பின்னர்தான் சம்பள திருத்தம் நடக்கும். குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், 8வது ஊதியக் குழுவில் ஏற்படும் அதிகரிப்பு 6வது ஊதியக் குழுவை விட பெரியதாக இருக்கும்.

8வது ஊதியக் குழுவில் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும்

2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான், புதிய ஊதியக் குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படும். ஆனால், இதைப் பற்றிய பேச்சுகள் துவங்கிவிட்டன என்பது உறுதி. இருப்பினும், இதற்கிடையில், இதற்கான ஊழியர் சங்கங்கள் மற்றும் பல அமைப்புகளின் இயக்கங்களும் அதிகரித்து வருகின்றன. நாடு தழுவிய இயக்கத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. 8வது ஊதியக் குழு தொடர்பாக தற்போதைக்கு அரசு சார்பில் எந்த முன்மொழிவும் இல்லை. நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஊதியக் குழு அமைக்கும் காலம் இன்னும் வரவில்லை என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காலக்கெடு 2024 ஆம் ஆண்டில் தொடங்கும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் அமைந்ததும், இது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றுதான் எதிர்பார்க்கப்படுகின்றது. 

புதிய ஊதியக்கமிஷன்: எப்போது அமல்படுத்தப்படக்கூடும்? 

2024-ம் ஆண்டு இறுதிக்குள் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை அமல்படுத்த வேண்டும். அதாவது 2026 முதல் இது நடைமுறைப்படுத்தப்படலாம். அப்படி நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 7வது ஊதியக் குழுவை ஒப்பிடுகையில், 8வது ஊதியக் குழுவில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஊதியக் குழுவின் அமைப்பையும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

8வது ஊதியக்குழு: ஆண்டுதோறும் சம்பளம் மாறுமா?

7வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மிகக் குறைந்த அளவே உயர்த்தப்பட்டது. ஊதியம் ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு ஏற்றவாறு உயர்த்தப்பட்டது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக வைக்கப்பட்டது. இதன் மூலம் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்த ஃபார்முலாவை அடிப்படையாகக் கருதினால், 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அதிகபட்ச வரம்பின் கீழ் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 ஆக இருக்கும். 

இதற்குப் பிறகு, கீழ்நிலை ஊழியர்களின் சம்பளத் திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் செயல்திறன் அடிப்படையில் செய்யப்படலாம். அதே நேரத்தில், அதிகபட்ச சம்பளம் கொண்ட ஊழியர்களின் திருத்தத்தை 3 வருட இடைவெளியில் செய்ய அரசு முடிவு செய்யக்கூடும்.

மேலும் படிக்க | விரைவில் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு? அரசு ஊழியர்களுக்கு பெரும் சம்பள உயர்வு!

ஊழியர்களின் சம்பளம் எப்போது, ​​எவ்வளவு அதிகரித்தது?

- 4வது ஊதியக்கமிஷனில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு: 27.6% ஆக்கப்பட்டது. இதில், அவர்களது குறைந்தபட்ச ஊதியம் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

- 5வது ஊதியக்கமிஷனில், ஊழியர்களுக்கு பெரும் பரிசு கிடைத்து. ஊழியர்களின் சம்பளம் 31% உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக அவர்களது குறைந்தபட்ச ஊதியம் நேரடியாக மாதம் ரூ.2550 ஆக உயர்ந்தது.

- 6வது ஊதியக்கமிஷனில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டது. இது அந்த நேரத்தில் 1.86 மடங்காக வைக்கப்பட்டது. இதனால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு கிடைத்தது. அவர்களது குறைந்தபட்ச சம்பளத்தில் 54% உயர்வு இருந்தது. இதன் காரணமாக அடிப்படை சம்பளம் ரூ.7000 ஆக உயர்ந்தது.

- 2014ஆம் ஆண்டுஊதியக்கமிஷன் உருவாக்கப்பட்டது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கருத்தில் கொண்டு, 2.57 மடங்கு அதிகரிப்பு செய்யப்பட்டது. ஆனால், 14.29% மட்டுமே அதிகரிப்பு இருந்தது. 

8வது ஊதியக்கமிஷனில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? 

இப்போது 8வது ஊதியக்கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு, அரசு பழைய அளவிலேயே சம்பளத் திருத்தத்தை செய்தால், இதிலும் ஃபிட்மென்ட் ஃபாக்டரே அடிப்படையாகக் கருதப்படும். இதன் அடிப்படையில் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் 3.68 ஆக்க முடியும். இதன் அடிப்படையில், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தில் 44.44% உயர்த்தப்படலாம். இதன் மூலம், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 ஆக அதிகரிக்கும்.

8வது ஊதியக்கமிஷன் வருமா வராதா?

8வது ஊதியக்கமிஷன் எப்போது அமைக்கப்படும் என்பதுதான் இப்போது கேள்வி. தற்போது அரசு சார்பில் அதற்கான எந்த முன்மொழிவும் இல்லை. நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் மக்களவையில் இதை திட்டவட்டமாக மறுத்தார். இருப்பினும், அதற்கான நேரம் வரும்போது அடுத்த ஊழ்தியக்கமிஷன் கண்டிப்பாக அமைக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது புதிய சம்பள உயர்வு குறித்து பரிசீலிக்க அரசுக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால்தான் இதற்கான வழிகள் பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அரசு ஊழியர்களை மகிழ்விக்க அரசு ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும். 

மேலும் படிக்க | 8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News