7th Pay Commission 18 மாத டி.ஏ அரியர்: அரசின் பதிலால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!!

ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நம்பிக்கை தகர்ந்துவிட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2021, 01:31 PM IST
7th Pay Commission 18 மாத டி.ஏ அரியர்: அரசின் பதிலால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!! title=

7th Pay Commission: ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மத்திய அரசு ஊழியர்களின் சார்பில், 18 மாத அகவிலைப்படியின் நிலுவைத் தொகை குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது என்பதை அரசாங்கம் இப்போது தெளிவுபடுத்தியுள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மட்டுமே செயலாக்கத்தில் இருக்கும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

18 மாத அரியர் தொகை கிடைக்காது

டிஏ (Dearness Allowance) அரியர் தொகை குறித்து, ஒன்றரை வருட காலத்திற்கு எந்த அரியர் தொகையையும் அளிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் கூறியுள்ளது. அதாவது ஜனவரி 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான அரியர் தொகை ஊழியர்களுக்கு கிடைக்காது.

அரசாங்கத்தின் இந்த அறிக்கையால் மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இருப்பினும், இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதாக தொழிற்சங்கம் கூறியுள்ளது. 18 மாதங்களுக்கு அகவிலைபப்டியை முடக்கியதால், அரசாங்கம் 34,402 கோடியை சேமித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலையும் நிதி அமைச்சரே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: 7th Pay Commission ஊழியர்களுக்கு ஜாக்பாட்: HBA திட்டத்தின் கால அளவை நீட்டித்தது அரசு!

இந்த முடிவு நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்டது: அரசாங்கம்

நிதி அமைச்சர், ராஜ்யசபாவில், “48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் ஜனவரி 1, 2020 முதல் செலுத்த வேண்டியிருந்தது. இது நிறுத்தப்பட்டதால் சுமார் ரூ .34,402.32 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுநோய் காரணமாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை முடக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

கோவிட் மூலம் எழும் பொருளாதார சவாலை சமாளிக்க, கருவூலத்தின் சுமையை குறைக்க வேண்டியது அவசியம். நாட்டின் நலன் கருதி அரசின் நிதிச்சுமையை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.

'எம்.பி., அமைச்சர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டது’

அரசாங்கத்தால் கொரோனாவால் (Coronavirus) ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான அனைத்து வழிகளிலும் வளங்களை திரட்டுவது அவசியம் என்று நிதி அமைச்சர் கூறினார். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, அகவிலை நிவாரணத்தை நிறுத்தியது போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்தது.

2020 ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 31 வரை 12 மாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் சம்பளத்தை 30 சதவிகிதம் வரை அரசாங்கம் குறைத்தது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அல்லது அகவிலைப்படியில் எந்த விதமான குறைப்பும் இருக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு சம்பளமும் வழங்கப்பட்டது. அகவிலைப்படியின் உயர்வு மட்டும் 1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2021 வரை முடக்கப்பட்டது.

ALSO READ: 7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News