காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 14 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 4-பாதுகாப்பு படை உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்!

Last Updated : Jun 4, 2018, 06:33 PM IST
காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 14 பேர் பலி! title=

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2ஆயிரத்திற்கும் மேற்ட்டவர்கள் கலந்து கொண்ட முக்கிய மதகுருமார்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட பகுதிகளில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் 4-பாதுகாப்பு படை உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேரில் 7 பேர் மத அறிஞர்கள் மற்றும் 4 பேர் பாதுகாப்பு படை வீரர்கள் ஆவார்கள். மீதமுள்ள 3 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்குமும் பொறுப்பு ஏற்கவில்லை. இதையடுத்து, மதகுருமார்கள் ஒரு அறிகையை வெளியிட்டனர். அதில், யுத்தத்தை நிறுத்தவும், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு உடன்படவும் ஆப்கானிய அரசாங்கப் படைகளும் தலிபான் மற்றும் பிற போராளிகளும் குருமார்கள் சபை கேட்டுக்கொண்டது.

Trending News