இந்தியாவில் கல்வி நெருக்கடி: உலக வங்கி கவலை

Last Updated : Sep 28, 2017, 09:38 AM IST
இந்தியாவில் கல்வி நெருக்கடி: உலக வங்கி கவலை title=

இந்தியாவில் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக நிலையில் இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது. 

'கல்வி மீதான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கற்றல் உலக மேம்பாட்டு அறிக்கை 2018' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை செப்டம்பர் 26-ம் தேதி அன்று உலக வங்கி வெளியிட்டது. 

இதில் இந்தியா, மலாவி உள்ளிட்ட 12 நாடுகளில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே கிராமப்புறங்களில் தொடக்க நிலை மற்றும் மேல்நிலை கல்வி இரண்டுமே மிகவும் பின் தங்கி இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது. 

அதில் இந்தியா பற்றிய சில முக்கிய அம்சங்கள்:-

கிராமப்புறங்களில் இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு 3-ம் வகுப்பு படிக்கும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு, இரண்டு இலக்க கழித்தல் கணக்கை சரிவர செய்ய முடியவில்லை. குறிப்பாக 2-ம் வகுப்பு மாணவர்களின் கணித பாட பலவீன பட்டியலில் உள்ள 7 நாடுகளில் இந்தியாவுக்கு முதலாவது இடம் கிடைத்து இருக்கிறது. 12 நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் இரண்டு இலக்க எண் கொண்ட கழித்தல் கணக்கை கூட செய்ய முடியவில்லை.

பள்ளிக்கூடங்களில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும், பல லட்சம் மாணவர்களுக்கு சரிவர எழுத, படிக்க தெரியவில்லை. குறிப்பாக அடிப்படை கணிதத்தில் மிகவும் பலவீனமாக உள்ளனர். இந்தியா கிராமத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், அவனால் 2-ம் வகுப்பு பாடத்தை மட்டுமே நன்கு வாசிக்கவோ, எழுதவோ தெரிகிறது. அதுவும் எளிமையான வார்த்தைகள் என்றால்தான் சுலபமாக படிக்கிறான்.

ஆந்திர மாநில கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலை மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளது. அங்கு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் ஒன்றாம் வகுப்பு பாடத்தில் உள்ள கேள்விகளுக்கு கூட சரிவர பதில் அளிக்க தெரியவில்லை.

இதுபற்றி உலக வங்கி குழு தலைவர் ஜிம் யோங் கிம் கூறுகையில், இந்தியாவில் கல்வித்தரம் மோசமாக உள்ளதாக வருங்காலத்தில் இந்தியாவில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியன பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் என கவலை தெரிவித்துள்ளார்.

Trending News