ஸ்ரீநகர் நவ்ஹட்டா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்

Last Updated : Aug 15, 2016, 01:26 PM IST
ஸ்ரீநகர் நவ்ஹட்டா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் title=

ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹட்டா பகுதியில், இன்று காலை 8.10 மணியளவில் சி.ஆர்.பி.எப்., வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் அருகில் உள்ள கட்டடத்தில் மறைந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படை வீரர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. சி.ஆர்.பி.எப்., ஜவான் ஒருவர் பலியானார். 

காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் கலவரத்தின் மையப்பகுதியாக நவ்ஹட்டா உள்ளது. இங்கு தான் அதிகளவில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கற்களை வீசும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால், இங்கு பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. 

சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 

Trending News