"பத்மாவத்" திரைப்படம் பார்க்கையில் கற்ப்பை இழந்த பெண்!

மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில், செகுந்தராபாத்தில் 19 வயது பெண் ஒருவர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்!

Last Updated : Feb 2, 2018, 06:08 PM IST
"பத்மாவத்" திரைப்படம் பார்க்கையில் கற்ப்பை இழந்த பெண்! title=

மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில், செகுந்தராபாத்தில் 19 வயது பெண் ஒருவர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்!

தெலுங்கானா மாநிலம் செகுந்தராபாத் திரையரங்கம் ஒன்றில் "பத்மாவத்" திரைப்படம் பார்க்க சென்ற பெண்மனி ஒருவர் பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்மனி, பேஸ்புக் மூலம் கிடைத்த நண்பர் ஒருவருடன், சமீபத்தில் வெளியான பத்மாவத் திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளார். திரைப்படம் பார்க்கையிலேயே பாதிக்கப்பட்ட பெண்மனியினை அந்த பேஸ்புக் நண்பல் பலவந்தப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப் பட்டவர், கண்டகாட்ல பிக்ஷபதி(23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மனி காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் IPC பிரிவு 367-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Trending News