காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடை -உச்சநீதிமன்றம்!

நில உரிமை இன்றி சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரை வெளியேற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Mar 1, 2019, 06:02 AM IST
காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடை -உச்சநீதிமன்றம்! title=

நில உரிமை இன்றி சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரை வெளியேற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது!

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 13-ஆம் நாள் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.

மாநில அரசுகளால் பட்டா உள்ளிட்ட நில உரிமை மறுக்கப்பட்ட பிறகும், சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகளை வெளியேற்றுமாறு கடந்த மாதம் 13-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இத்தகையோரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறும் 21 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் நாடு முழுவதும் சுமார் 11.80 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. பழங்குடியினர் மற்றும் காட்டுவாசிகள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அதிருப்தி வெளியிட்டு இருந்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் ‘பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகள் (காட்டு உரிமைகளின் அங்கீகாரம்) சட்டம்-2006’ ஒரு பயனுள்ள சட்டமாகும். காடுவாழ் மக்கள் மிகவும் ஏழைகள் மட்டுமின்றி கல்வியறிவற்றவர்கள் ஆவர். இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் குறித்து அவர்கள் தெரிந்திருக்கவில்லை. எனவே அவர்களின் நன்மைக்காக இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனு மீது நேற்று விரிவாக விசாரணை நடத்தியது.

விசாரணையின் முடிவில், பட்டா இன்றி காடுகளில் வசித்து வரும் பழங்குடிகள் மற்றும் காட்டுவாசிகளை வெளியேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 13-ஆம் நாள் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்து நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தனர்.

Trending News