சோபியான் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; 2 வீரர்கள் வீர மரணம்

Last Updated : Aug 13, 2017, 12:55 PM IST
சோபியான் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; 2 வீரர்கள் வீர மரணம் title=

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூடு முடுவுக்கு வந்துள்ளது. 

சோபியான் மாவட்டம் அமைத்துள்ள அவ்நீரா கிராமத்தில் பதுங்கிக் இருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த இருதரப்பு துப்பாக்கி சண்டையில் இரண்டு வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும் காயம் அடைந்த வீரர்களை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 

இருதரப்பு இடையேயும் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வந்தது. தற்போது துப்பாக்கி சண்டை முடுவுக்கு வந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி மூன்று பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

Trending News