இன்று முதல் புதிய ரூ.200 நோட்டு: ரிசர்வ் வங்கி

Last Updated : Aug 25, 2017, 12:43 PM IST
இன்று முதல் புதிய ரூ.200 நோட்டு: ரிசர்வ் வங்கி title=

ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ரூ.200 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

இந்த மாதம் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ இந்த புதிய ரூ.200 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்று கூறி இருந்த நிலையில் தற்போது புதிய 200 ரூபாய் நோட்டு இன்று முதல் புழகத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவத்து உள்ளது.

ரூ.100 க்கும் ரூ.500 க்கும் இடையே எந்த ரூபாய் நோட்டும் இல்லை. இதனால் சில்லரை பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. பணமதிப்பிழப்புக்கு பிறகு புதிய ரூ.200 நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி. 

 

 

Trending News