பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு

Last Updated : Jul 17, 2017, 12:58 PM IST
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு title=

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. இரு அவைகளும் கூடியதும், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டத்துடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

கடந்த 10-ம் தேதி இரவு அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Trending News