நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Last Updated : May 5, 2017, 02:45 PM IST
நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் title=

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு  தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா வழக்கின் மேல்முறையடு விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

இதில் 4 பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதியாகுமா என்று எதிர்பார்த்த நிலையில், உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது தீர்ப்பளித்தது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த மாணவிக்கு டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார். 

இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டது. 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்க்கு இந்திய தண்டனைச் சட்டம் 376-ஏ-வின் கீழ் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது.

Trending News