புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்: கட்காரி!

புதிய மோட்டார் வாகனங்கள் சட்டம் மக்களை விதிகளை மதிக்க வைக்கும் வகையில் கடுமையானது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 8, 2019, 12:16 PM IST
புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்: கட்காரி! title=

புதிய மோட்டார் வாகனங்கள் சட்டம் மக்களை விதிகளை மதிக்க வைக்கும் வகையில் கடுமையானது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!!

புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சாலை விதிமீறல்களுக்கான அபராதம் பத்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு சமூகவலைதளங்கள் மூலம் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து நாக்பூரில் நடந்த போது நிகழ்ச்சியில் பேசிய கட்காரி; புதிய சட்டத்தின் கீழ் அதிக அபராதம் விதிக்கப்படுவதை குறித்து விளக்கிய கட்கரி, சட்டத்தை மீறுபவர்கள் மட்டுமே அபராதம் செலுத்துகிறார்கள் என்று கூறினார். "ஒருவர் சட்டத்தை மீறவில்லை என்றால், அவர் ஏன் அபராதம் செலுத்த வேண்டும்?" என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். 

நாங்கள் சிவப்பு சமிக்ஞைகளைத் தாண்டுகிறோம், விபத்துக்கள் தினமும் நடக்கின்றன, இதனால் மக்கள் உயிரை இழக்கிறார்கள். மக்களுக்கு சட்டத்தின் மீது பயம் இருந்தால் தான் அவர்கள் விதிகளைப் பின்பற்றுவார்கள் என அவர் கூறினார். 

2019 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதாவின் கீழ் அதிக அபராதம் விதிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய போது கட்கரி கூறினார்; மக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், ஒரு சிறிய தொகையை செலுத்துவதன் மூலம் தப்பித்துக்கொள்வார்கள். கடுமையான விதிகள் உருவாகும் வரை இந்த அணுகுமுறை நிறுத்தப்படாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இப்போது புதிய சட்டத்தால் மக்கள் உரிமம், காப்பீடு மற்றும் ஹெல்மெட் வாங்குவதற்கு விண்ணப்பிக்கிறார்கள், இது ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றும்" என அவர் கூறினார். 

 

Trending News