நாளை துவங்குகிறது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர்

Last Updated : Jul 16, 2017, 10:00 AM IST
நாளை துவங்குகிறது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் title=

பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டம் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

கூட்டத்தொடரின் முதல் நாளான நாளை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, நாட்டின் பாதுகாப்பு, பசுக்கள் விவகாரத்தில் நடைபெறும் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக்கட்சி கூட்டம் இன்று பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற உள்ளது.

Trending News