ஜூலை 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2022, 08:26 PM IST
  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
  • இருபது மைக்ரான்கள் டிசம்பர் 31, 2022 முதல் அமலுக்கு வரும்.
ஜூலை 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை title=

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022 ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்ற தெளிவான அழைப்பு விடுத்த நிலையில், இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளை அறிவித்தது. 

பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு பொருளாக உள்ளது. தற்போது கண்ணுக்கு எட்டியவரை ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்கள் என பார்க்க முடிகிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிகளை மறுசுழற்சியும் செய்ய முடியாத நிலையில், அவற்றின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில், ஜூலை 1, 2022 முதல் நாடு முழுவதும் குறைந்த பயன்பாடு மற்றும் அதிக குப்பைகளை ஏற்படுத்தும் வகையிலான, சில பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை இந்தியா தடை செய்கிறது.

கடல் சூழல் உட்பட நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில்  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதகமான விளைவுகள் உலகளவில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசுபாட்டை நிவர்த்தி செய்வது அனைத்து நாடுகளையும் எதிர்கொள்ளும் முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக மாறியுள்ளது.

மேலும் படிக்க | RIL: ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா: மகன் ஆகாஷ் தலைவரானார்

2019 இல் நடைபெற்ற 4வது ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டில், உலக சமூகம் இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்து.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான தீர்மானத்தை இந்தியா முன்வைத்தது. மாநாட்டில்  இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மார்ச் 2022 இல் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மன்றத்தின் 5வது கூட்டத் தொடரில், பிளாஸ்டிக் மாசுபாட்டின் மீதான உலகளாவிய நடவடிக்கையை இயக்குவதற்கான தீர்மானத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இந்தியா ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் பிளாஸ்டிக் குச்சிகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன் (தெர்மாகோல்), பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், ஃபோர்க்ஸ், ஸ்பூன்கள் போன்ற கட்லரிகள் பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்வீட் பாக்ஸ்களைச் சுற்றி  பேக்கிங் செய்தல், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகியவை அடங்கும்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2021, செப்டம்பர் 30, 2021 முதல் எழுபத்தைந்து மைக்ரானுக்கும் குறைவான தடிமன் மற்றும் நூறுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடை செய்கிறது மற்றும் இருபது மைக்ரான்கள் டிசம்பர் 31, 2022 முதல் அமலுக்கு வரும்.

மேலும் படிக்க | பிரதமர் மோடியை தேடும் ஜோ பைடன்; இந்தியர்களை பெருமிதம் கொள்ள செய்யும் வீடியோ

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் (CIPET) இணைந்து CPCB/SPCBs/PCCs ஆகியவற்றின் ஈடுபாட்டுடன் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக MSME பிரிவுகளுக்கு திறன் வளர்ப்பு பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மாநில மையங்கள், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை விட்டு மாறுவதற்கு அத்தகைய நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் சட்டவிரோத உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை சரிபார்க்க சிறப்பு அமலாக்க குழுக்கள் அமைக்கப்படும். பொருட்களை. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதை தடுக்க எல்லை சோதனைச் சாவடிகளை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பயணம்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது, இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப்கள், தொழில்துறை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், ஒழுங்குமுறை அமைப்புகள், நிபுணர்கள், குடிமக்கள் அமைப்புகள், ஆர் & டி மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்துள்ளது.

மேலும் படிக்க | ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News