காஷ்மீர்: ராணுவ முகாம் மீது தாக்குதல்; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Last Updated : Oct 6, 2016, 09:35 AM IST
காஷ்மீர்: ராணுவ முகாம் மீது தாக்குதல்; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை title=

எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹண்ட்வாராவில் அமைத்துள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதாவது லாங்கேட் பகுதியில் உள்ள ஹண்ட்வாரா ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சர்வதேச எல்லைப்பகுதியில் 3 இடங்களில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியையும் ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். 

கடந்த மாதம் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதற்க்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பயங்கரவாதிகள் 7 முகாம்களை அதிரடி தாக்குதல் நடத்தி இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது.

Trending News