பழிவாங்கும் போது நீதி அதன் தன்மையை இழக்கும் -போப்டே!

அனைவருக்கும் பொதுவான நீதி பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தும் போது அதன் தன்மையை இழக்கும் என தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 7, 2019, 04:48 PM IST
பழிவாங்கும் போது நீதி அதன் தன்மையை இழக்கும் -போப்டே! title=

அனைவருக்கும் பொதுவான நீதி பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தும் போது அதன் தன்மையை இழக்கும் என தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விவகாரங்களை தீர்ப்பதில் நீதித்துறை தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நீதித்துறை தன்னைப் பற்றிய மாற்றங்கள் மற்றும் கருத்துக்களை அறிந்திருக்க வேண்டும் என்றும் இந்திய தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.

"நாட்டில் சமீபத்திய நிகழ்வுகள் பழைய விவாதத்தை புதிய வீரியத்துடன் தூண்டியுள்ளன. கிரிமினல் நீதி அமைப்பு அதன் நிலைப்பாடு மற்றும் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் குற்றவியல் விஷயங்களை அகற்றுவதற்கு நேரம் எடுக்கும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்” என நீதிபதி போப்டே ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்ற ஒரு விழாவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இந்தியாவின் பாரிய பின்னடைவுக்கு மத்தியில், நீதிபதி போப்டே, தற்போதுள்ள வழிவகைகளை வலுப்படுத்துவதன் மூலமும், மலிவு, விரைவான மற்றும் திருப்திகரமான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான புதிய வழிகளை உருவாக்குவதன் மூலமும், சுய-திருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் நீதி கிடைக்கக்கூடியதாக இருக்க நீதித்துறை உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்., "நீதி ஒருபோதும் உடனடி பொருளாக இருக்ககூடாது, நீதி ஒருபோதும் பழிவாங்கும் வடிவத்தை எடுக்கக்கூடாது. பழிவாங்கும் போது நீதி அதன் தன்மையை இழக்கும் என்று நான் நம்புகிறேன். சுய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதித்துறையில் தேவை உள்ளது, ஆனால் அவை விளம்பரப்படுத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது விவாதத்திற்குரியது,” என குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை முற்றிலுமாகத் தவிர்க்க உதவும் முன் வழக்குத் தலையீட்டை கட்டாயமாக்குவதையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

"நாம் வழக்குகளை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் வழிமுறை படுத்த வேண்டும். வழக்குக்கு முந்தைய மத்தியஸ்தத்தை வழங்கும் சட்டங்கள் உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி போபே முன்னோடியில்லாதவையும் இந்நிகழ்வில் குறிப்பிட்டார்.

Trending News