உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் திடீர் ஆய்வு!

நீதிமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்!!

Last Updated : Jul 20, 2018, 12:06 PM IST
உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் திடீர் ஆய்வு!  title=

நீதிமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்!!

நீதி மன்ற வளாகங்களில் இயங்கிவரும் உணவகங்களில் திடீர் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். பொதுவாக நீதி மன்ற வளாகங்களில் இயங்கிவரும் உணவகங்களில் அங்கு வேலை பார்க்கும் பணியாட்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் போன்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் நீதிபதிகள தீர் என ஆய்வை மேற்கொண்டுள்ளனர். உச்சநீதிமன்ற வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பானுமதி ஆகியோர் திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 
 
நீதிமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வளாகத்தில் ஆய்வை மேற்கொண்டுவருகின்றனர். இந்திய வரலாற்றில், உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வில் ஈடுபடுவது இதுதான் முதன்முறை என தகவல் தெரிவித்துள்ளனர்! 

 

Trending News