ரூ.1 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்!

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில் ரூ.1 லட்சம் மதிப்பலான மதுபானங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Jul 13, 2018, 09:08 PM IST
ரூ.1 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்! title=

ரான்ஜியா: திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில் ரூ.1 லட்சம் மதிப்பலான மதுபானங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

அஸாம் மாநிலம் ரான்ஜியாவில், தொடர்வண்டியில் வைத்து கடத்த முயன்ற ரூ.1 லட்சம் மதிப்பலான மதுபானங்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கவனிப்பார் அற்று கிடந்த பைகளில் இருந்த 650 பாட்டில்களில் அடைக்கப்பட்டிருந்த மதுபானங்களின் மதிப்பு ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்கள் அருணாச்சல் பிரதேசத்தில் இருந்து திருவணந்தபுறத்திற்கு கொண்டு செல்லும் போது பிடிப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் பிடிப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Trending News