காஜிபூரில் குப்பை மேடு சரிவு: தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டிஸ்

Last Updated : Sep 4, 2017, 12:21 PM IST
காஜிபூரில் குப்பை மேடு சரிவு: தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டிஸ் title=

காஜிபூர் குப்பை மேடு சரிந்தது விபத்து ஏற்பட்டது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லி அரசு, கிழக்கு டெல்லி மாநகராட்சி கழகம் (EDMC), தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆகியவற்றின் மீது நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.

"அதிகாரிகளின் புறக்கணிப்பு காரணமாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஏன் இழப்பீடு வழங்க வில்லை" என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

ஏன் EDMC அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்க வில்லை என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று கிழக்கு டெல்லியில் உள்ள காஜிபூர் பகுதியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News