FASTag பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சுங்கச்சாவடிகளில் FASTag மின்னணு அட்டைகளை பெறுவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Last Updated : Dec 15, 2019, 09:31 AM IST
FASTag பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு title=

சுங்கச்சாவடிகளில் FASTag மின்னணு அட்டைகளை பெறுவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிலை தவிர்த்தல், வாகன ஓட்டிகள் எளிதாக சுங்க கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்டவைக்காக FASTag முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சுங்கச்சாவடி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் FASTag பெறாமல், பணமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கார்ட்டை ஸ்டிக்கர் போல் கார் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். FASTagல் தடுப்புக்கம்பிக்கு மேல் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது வழித்தடத்தில் கார் செல்லும் போது, தடுப்புக்கம்பிக்கு மேல் உள்ள ஸ்கேனர் கார் கண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த சில விநாடிகளிலேயே சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் செய்து கொள்ளும். 

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சோதனை அடிப்படையில் FASTag டிஜிட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த FASTag முறை கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே 15 நாள்கள் அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News