FASTag கட்டாயமாக்கப்பட்டது, இனி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அச்சம்

FASTag  எனும் மின்னணு அட்டை முறை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில சுங்கச் சாவடிகள் 100% டிஜிட்டல் மயமானது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2021, 08:20 AM IST
  • FASTag கட்டாயமாக்கப்பட்டது
  • தானியங்கி டோல் பிளாசா கட்டணம் செலுத்தும் முறை ஃபாஸ்டாக்
  • சில சுங்கச்சாவடிகள் 100% டிஜிட்டலானது
FASTag கட்டாயமாக்கப்பட்டது, இனி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அச்சம் title=

புதுடெல்லி: FASTag  எனும் மின்னணு அட்டை முறை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில சுங்கச் சாவடிகள் 100% டிஜிட்டல் மயமானது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு, 2016 ஆம் ஆண்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க, பாஸ்டேக் அட்டையை அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கம், சுங்க சாவடிகளில், அதாவது டோல் ப்ளாஸாவில் கட்டணம் வசூலிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாகும். 

இந்த வகையில், சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையிலிருந்து பணம் வசூலிக்கப்படும்.வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப,  பாஸ்டேக் (FASTag) அட்டையில் முன் கூட்டியே கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி கொள்ள வேண்டும்.

ஆனால் இது நடைமுறை சிக்கல்களைத் தாண்டி முழுமையாக செயல்பாட்டிற்கு வருவதற்கு சில நாட்கள் ஆகலாம். அதுவரை சுங்கச்சாவடிகளில் நெரிசல் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Also Read | FASTag பெறுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா

FASTag என்பது ஒரு மின்னணு அட்டை. அதனை உங்கள் வாகனத்தின் விண்ட்ஷீல்டில் ஒட்ட வேண்டும். இது RFID தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதன் மூலம் FASTag உடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகவோ, அல்லது அதன் வாலெட்டில் நீங்கள் வைத்திருக்கும் இருப்பிலிருந்தோ கட்டணத்தை செலுத்தலாம். பணம்  எவ்வளவு செலுத்தப்பட்டது, இருப்பில் மீதமுள்ள பணம் குறித்த விவரங்களுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு, எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் (FASTag) அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக, இதற்கான கால வரம்பை மத்திய அரசு (Central Government) பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் அட்டைகளை பெறும் வகையில், சுங்கச்சாவடிகளுக்கு அருகே பாஸ்டேக் பெறுவதற்கான முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

ALSO READ | தற்சார்பு பாரதம்: கூகுள் மேப், கூகுள் எர்த் சேவைக்கு போட்டியாக ISRO-MapmyIndia

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News