பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!

ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jul 26, 2024, 12:24 PM IST
  • நிதி பிரச்சனையால் பொறியாளர் தற்கொலை.
  • அடல் சேது பாலத்தில் இருந்து தற்கொலை.
  • உடலை தேடும் பணிகள் தீவிரம்.
பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ! title=

மும்பையை சேர்ந்த 38 வயதாகும் கே. ஸ்ரீனிவாஸ் என்ற நபர் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்துள்ள காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொறியாளராக வேலைபார்த்து வரும் இவருக்கு நிறைய நிதி சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் நவி மும்பையில் உள்ள அடல் சேது ஹார்பர் பாலத்தில் இருந்து குதித்து ஸ்ரீனிவாஸ் தற்கொலை செய்து  கொண்டுள்ளார். காரில் வந்த இவர் பாலத்தின் ஓரத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே குறித்து தற்கொலை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அறிவிப்புகள் இல்லை

டோம்பிவிலியில் வசித்து வரும் ஸ்ரீனிவாஸ் செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு தனது மனைவி மற்றும் நான்கு வயது மகளை தொடர்பு கொண்டுள்ளார். அதிக நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த ஸ்ரீனிவாஸ் பல நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீனிவாஸ் இதற்கு முன்பே 2023ம் ஆண்டு குவைத்தில் வேலைபார்த்து வந்த போது தற்கொலைக்கு முயன்றுள்ளார். தரையை சுத்தம் செய்யும் இயந்திரத்தை கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரில் வேகமாக வந்துள்ள ஸ்ரீனிவாஸ் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே குதிக்கும் காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடலோர காவல்துறை மற்றும் உள்ளூர் மீனவர்களை வைத்து அவரது உடலை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அடல் சேது பாலத்தில் நடைபெறும் இரண்டாவது தற்கொலை இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இன்று சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பாலத்தில் இருந்து குறித்துள்ளார். உயிரிழந்துள்ள இளைஞர்? எதற்காக தற்கொலை செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | நடிகை கங்கனா ரனாவத் எம்பி பதவி பறிபோகுமா? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News