டெல்லியில் உளவு பார்த்ததாக பாக்.தூதரக அதிகாரி கைது

 இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

Last Updated : Oct 27, 2016, 12:48 PM IST
டெல்லியில் உளவு பார்த்ததாக பாக்.தூதரக அதிகாரி கைது title=

டெல்லி:  இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியா மெகமூத் அக்தருடன் கைது செய்யப்பட்ட மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கிர் ஆகிய இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர்.

ஒருவாரமாக இருவரையும் கண்காணித்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இருவரிடமும் டெல்லியில் உள்ள சானக்யாபுரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து இந்திய ராணுவம் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தகவல் கிடைத்துள்ளது.

கைது தொடர்பாக டெல்லி போலீஸ் அதிகாரி கூறியதாவது:- இந்திய ராணுவ ரகசியம் தொடர்பாக உளவு பார்த்ததாக பாகிஸ்தான் துணைத் தூதரக அலுவலர்கள் இருவரை ராஜஸ்தானில் கைது செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் அப்துல் பாஸித்துக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

Trending News