டெல்லி சம்பவம்:- டெம்போவேன் டிரைவர் கைது

Last Updated : Aug 12, 2016, 01:33 PM IST
டெல்லி சம்பவம்:- டெம்போவேன் டிரைவர் கைது title=

மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் இ-ரிக்‌ஷா ஒன்றின் மீது நேற்று அதிகாலை டெம்போ வேன் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரிக்‌ஷா ஓட்டுநர் 40 வயதுடைய மதிபூல் என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போதும், அவ்வழியாக நடந்தும், வாகனங்களில் சென்ற பலரும் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இதில் மேலும் ஒரு கொடுமை என்னவென்றால், மதிபூல் அருகே வந்த ஒரு நபர் அவரது செல்போனை எடுத்துச் சென்றுள்ளார். 

சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து போலீசார் வந்த போது, மதிபூல் உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் ஓடிய டெம்போ வேன் டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் இருந்து சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு டெம்போ வேன் டிரைவரை தேடினர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ராஜேஷ் என்ற அந்த வேன் ஒட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Trending News