மேலும் 14 MLA-க்கள் தகுதி நீக்கம் - கர்நாடகா சபாநாயகர் அதிரடி!

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற MLA-க்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் ரமேஷ் குமார்!

Last Updated : Jul 28, 2019, 12:36 PM IST
மேலும் 14 MLA-க்கள் தகுதி நீக்கம் - கர்நாடகா சபாநாயகர் அதிரடி! title=

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற MLA-க்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் ரமேஷ் குமார்!

புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ்குமார் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற MLA-க்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்., "முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் MLA-க்கள் 11 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் MLA 3 பேர் என மொத்தம் 14 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இதையடுத்த், தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் வரும் 2023 மே 15-ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது." என தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற MLA-க்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கர்நாடகாவில் HD குமாரசாமி தலைமையிலான ஆட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு உதவியுடன் கவிழ்க்கப்பட்டதை அடுத்து எடியூரப்பா நான்காவது முறையாக மாநில முதல்வராக நேற்றைய தினர் பதவி ஏற்றார். 

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை எதிர்த்து MLA பதவியை 15 பேர் ராஜினாமா செய்தது ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து அந்த 15 பேரையும் மீண்டும் தேர்தலில் நிற்க விடாமல் செய்வதற்காக அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 

மேலும் அதிருப்தி MLA-க்களை தகுதி நீக்கம் செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். முன்னதாக கடந்த வியாழன் அன்று அதிருப்தி MLA-க்களில் 3 பேரை கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். மற்ற அதிருப்தி MLA-க்களையும் தகுதி நீக்கம் செய்ய ஆலோசித்து வந்தார். இந்நிலையில் மற்ற அதிருப்தி MLA-க்களையும் சபாநாயகர் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Trending News