சத்தீஸ்கர்: நக்சலைட் தாக்குதலில் BSF படைவீரர் படுகாயம்....

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கர் மாவட்டத்தில் நக்சலைட் தாக்குதலில் BSF ஜவான் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2018, 11:15 AM IST
சத்தீஸ்கர்: நக்சலைட் தாக்குதலில் BSF படைவீரர் படுகாயம்....  title=

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கர் மாவட்டத்தில் நக்சலைட் தாக்குதலில் BSF ஜவான் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்...

சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டசபைக்கு நவம்பர் 12 (நாளை) முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கும் இலையில் நேற்றுடன் பிரசாரத்திற்கான முடிவடைந்துள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நக்சலைட் ஆதிக்கம் மிக்க பகுதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கர் மாவட்டத்தில் 7 இடங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதை தொடர்ந்து பிஜப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 

துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். அவனிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதன் காரணமாக சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

 

Trending News