வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

வளைகுடாவின் அனைத்து நாடுகளிலும் கொரோனோ வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு வாழும் இந்திய குடிமக்கள் பயப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 28, 2020, 05:31 PM IST
  • ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கு விருப்பம்.
  • ஏர் இந்தியா மற்றும் இந்திய கடற்படையிடம் விரிவான திட்டத்தை உருவாக்க கேட்டுக்கொண்ட மத்திய அரசு
  • சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளனர்.
  • கடற்படை தனது மூன்று பெரிய போர்க்கப்பல்களை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும்.
வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் title=

புது தில்லி: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் சிலர் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். ஏர் இந்தியா மற்றும் கடற்படை அவர்களை மீண்டும் கொண்டு வர தயாராக இருந்தன. இருப்பினும், வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தற்காலிகமாக இப்போது அந்த முயற்சி நிறுத்தப்பட்டுள்ளன. 

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ [ANI]படி, அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள், "வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய பிரஜைகளை வெளியேற்ற திட்டமிட்டுள்ளோம். இப்போதே நாங்கள் அங்கு இருக்கும் நிலைமையைக் கண்காணித்து அதற்கேற்ப தயாராகி வருகிறோம். நாங்கள் ஏர் இந்தியா மற்றும் இந்திய கடற்படையிடம் விரிவான திட்டத்தை உருவாக்க கேட்டுக் கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர். 

அதேநேரத்தில் துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் அதிகாரி, "இந்த விஷயத்தில் தில்லியில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப் படுத்தலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். திரும்பப் பெறுவதற்கான முறை இந்திய அரசால் முடிவு செய்யப்படும், நான் உறுதியாக நம்புகிறேன். ஏர் இந்தியா இந்த பணியில் ஈடுபடும். இந்தியர்களை திரும்ப அழைத்துச் செல்வதில் கடற்படையின் பங்கு பற்றி எனக்குத் தெரியாது எனக் கூறினார். 

நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களிடமிருந்து எந்த பதிவு செயல்முறை அதிகாரப்பூர்வ இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த பணிக்கு ஆன்லைன் பதிவு வசதி வழங்கப்படும். இந்த விவகாரத்தில் டெல்லியில் இருந்து இறுதி முடிவுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.

வளைகுடாவின் அனைத்து நாடுகளிலும் கொரோனோ வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு வாழும் இந்திய குடிமக்கள் பயப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் விமான சேவை மற்றும் பிற பயண வழிமுறைகள் நிறுத்தப்பட்டதால் அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.

பல இந்தியர்கள் தூதரகங்களை சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான விருப்பத்தைக் காட்டியதாக அரசாங்க வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கம் சாத்தியமான அனைத்து திட்டங்களையும் முழு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. 

சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளனர். அவர்களில் பலர் துறைமுக நகரங்களில் வசித்து வருகின்றனர். அதனால்தான் கடல் வழித்தடங்கள் வழியாக வெளியேற்றுவதற்கான விரிவான திட்டத்தை வழங்குமாறு இந்திய கடற்படையை அரசாங்கம் கேட்டுள்ளது" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கடற்படை, அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த அதன் விரிவான வெளியேற்ற திட்டத்தில், "இந்திய கடற்படை வளைகுடா நாடுகளில் இருந்து 1,500 இந்தியர்களை மூன்று கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து வெளியேற்ற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.

வெளியுறவு அமைச்சக வட்டாரங்களின்படி, "தேவையான ஏற்பாடுகளுக்காக நாங்கள் மாநிலங்கள் / யூடி அரசாங்கங்களுடன் எங்கள் ஆலோசனையைத் தொடங்கினோம். அதேபோல், அனைத்து நிறுவனங்களும் ஒரு அறிக்கையை உருவாக்கி அவர்களை எவ்வாறு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள். அவர்கள் திரும்பப் பெறும் செலவுகளை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை தீர்மானிக்க விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த செலவுகளை அரசாங்கம் ஏற்கும் அல்லது அந்த பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் எனஎனக் கூறப்பட்டு உள்ளது. 

குறிப்பிடத்தக்க வகையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை வெளியேற்ற கடற்படை தனது தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடற்படை தனது மூன்று பெரிய போர்க்கப்பல்களை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும். மக்களை வெளியேற்ற ஐ.என்.எஸ் ஜலாஷ் வேறு இரண்டு போர்க்கப்பல்களுடன் தயாராக உள்ளார். இந்த போர்க்கப்பல்களை சில நாட்களுக்குள் செல்ல தயாராக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுள்ளது.

ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் உள்ளிட்ட தென்மேற்கு ஆசியாவில் பாரசீக வளைகுடாவின் எல்லையில் உள்ள நாடுகள் வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏராளமான இந்திய தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். இங்கு இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் எண்ணெய் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் செய்யப்படுகின்றன. 

குவைத், ஓமான், பஹ்ரைன் போன்ற சிறிய நாடுகளை கூட புறக்கணிக்க முடியாது. குவைத் சுமார் 1 மில்லியன் இந்தியர்களைக் கொண்டுள்ளது. அங்கு கொரோனாவை எதிர்த்துப் போராட இந்தியா தனது மருத்துவக் குழுவை அனுப்பியது. மூன்று நாடுகளிலும், 1.5 மில்லியன் இந்தியர்கள் குடியிருப்பாளர்கள் அல்லது தொழிலாளர்களாக வாழ்கின்றனர். ஈராக் போன்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கூட, 17,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் (கடந்த ஆண்டு எண்ணிக்கை) எண்ணெய் தொழிலாளர்கள், டிரக் டிரைவர்கள் போன்றவர்களாக பணியாற்றி வருகின்றனர்.

Trending News