கற்பழிப்பு வழக்கில் சுவாமி ஆசாராமின் மகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

சுவாமி ஆசாராம் ராமின் மகன் நாராயண் சாய் சூரத் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என சூரத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 26, 2019, 02:59 PM IST
கற்பழிப்பு வழக்கில் சுவாமி ஆசாராமின் மகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு title=

புது தில்லி: சுவாமி ஆசாராமின் மகன் நாராயண் சாய் சூரத் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என சூரத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனையை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நாராயண் சாயின் உதவியாளர்களான கங்கா, ஜமுனா மற்றும் ஹனுமான் ஆகியோரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு சகோதரிகள் 2002 முதல் 2005 வரை எங்களை ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் எங்கள் பலாத்தகாரம் செய்தனர் என அவர்கள் மீது கற்பழிப்பு புகார் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். டிசம்பர் 2013ல் ஹரியானா குருக்ஷேத்ராவுக்கு அருகே உள்ள பிப்லி கிராமத்தில் 40 வயதான நாராயண சாயி போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

Trending News