இந்த மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டால் கருப்பு பூஞ்சை பரவும் அபாயம் ஏற்படுமா

கொரோனா நோயாளிகள் அதிகப்படியான ZINC மருந்துகள் மற்றும் Iron மாத்திரைகளை எடுப்பதும் கூட பிளாக் பங்கஸ் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2021, 03:58 PM IST
  • கருப்பு பூஞ்சைக்கு ஸ்டெராய்டுகள் மட்டுமே பொறுப்பல்ல
  • ZINC-IRON ஒரு காரணமாக இருக்கலாம்
  • சில இளைஞர்களிடமும் தற்போது கருப்பு பூஞ்சை தோன்றி உள்ளது.
இந்த மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டால் கருப்பு பூஞ்சை பரவும் அபாயம் ஏற்படுமா title=

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகின. இந்த கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த புதிய வகை வைரஸ் காரணமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது.

ALSO READ | தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை மருந்து 100 குப்பிகள் ஒதுக்கீடு

இதற்கிடையில் ZINC மருந்துகள் மற்றும் Iron மாத்திரைகளை எடுப்பதும் கூட பிளாக் பங்கஸ் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் விகே பால் கூறியதாவது, கருப்பு பூஞ்சை பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவதாலும், சர்க்கரை வியாதி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதாலும் தோன்றுகிறது. அதிக ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்தினாலும் இது தோன்றும்.

சில இளைஞர்களிடமும் தற்போது கருப்பு பூஞ்சை தோன்றி உள்ளது. ஆனால் இந்த கருப்பு பூஞ்சை மருத்துவம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஸ்டிராய்டு மருந்துகளை கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினாலும் கண்டிப்பாக கருப்பு பூஞ்சை பரவலை கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனைகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்
நோயாளி ஹைப்பர் கிளைசீமியாவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதாவது நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கோவிட் -19 ல் இருந்து மீண்டு, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், வீட்டிற்கு வந்த பிறகும் இரத்த குளுக்கோஸ் அளவை குளுக்கோமீட்டரின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஸ்டெராய்டுகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மருந்துகளுக்கான சரியான அளவுகள் மற்றும் நேர இடைவெளிகளை அறிய வேண்டும். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 

கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்யக்கூடாது
நோயின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். மூக்கு அடைபட்டால், அது சைனஸ் பிரச்சனை தான் என எண்ணி அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். குறிப்பாக கோவிட் -19 நோயாளிகள் மூக்கடைப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முகோர்மைகாசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் நோயாளி இறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News