வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 8, 2023, 05:59 PM IST
  • லோக்சபா தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) மற்றும் பா.ஜ.க. கூட்டணி.
  • பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இல்லத்தில் புதன்கிழமை ஜேடிஎஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது.
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி! title=

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஜேடிஎஸ் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்க உள்துறை மந்திரி அமித் ஷா ஒப்புக்கொண்டதாகவும் பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா இன்று கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, "முன்னாள் பிரதமரை தேவகவுடாவை சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு 4 இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் கூட்டணிக்கு வரும் மதசார்பற்ற ஜனதா தளத்தை வரவேற்கிறேன்," என்று எடியூரப்பா கூறினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்எல்சி ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மற்றும் ஜேடி(எஸ்) இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பை கிண்டல் செய்து, ஆதரவற்ற இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார். லோக்சபா தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) மற்றும் பா.ஜ.க. கட்சிகள் தங்களுக்கு இடையே  கூட்டணி அமைப்பது பற்றி முடிவு எடுப்பது அவர்களது விருப்பம். சட்டசபை தேர்தலுக்கு முன்பும் கூட்டணி வைத்தனர், பிறகு உடைந்தனர். இப்போது மீண்டும் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். இதனால் மக்கள் நம்பிக்கையை இழக்கிறீர்கள். மக்கள் உங்கள் வசதிக்கேற்ப கூட்டணி அமைத்த பிறகு, அந்தந்த கட்சிகளின் நம்பகத்தன்மையும்  இல்லாமல் போய் விடுகிறது என்றார். 

முன்னதாக, பாஜகவுடனான கூட்டணி குறித்து எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களின் கருத்தை அறிய, முன்னாள் பிரதமர் தேவகவுடா முன்னிலையில், பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இல்லத்தில் புதன்கிழமை ஜேடிஎஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது.

2023 சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களை மட்டுமே வென்று தனது கேடரைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்த ஜே.டி.எஸ்-க்கு இந்தக் கூட்டணி பலத்த அடியாக அமைந்தது. கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினரிடையே ஆதரவைப் பெற்றுள்ள பாஜக இப்போது கர்நாடகாவில் உள்ள மற்ற ஆதிக்கச் சமூகமான வொக்கலிகாக்களிடையே உள்ள ஜேடிஎஸ் வாக்குத் தளத்திலிருந்து வெற்றிபெறும் என்று நம்புகிறது.

மேலும் படிக்க | G-20: வெளிநாடு விருந்தினர்களுக்கு ₹ 18 கோடி வாடகையில் 20 லிமோசின் கார்கள்!

2019 லோக்சபா தேர்தலில்,  ஒரு லோக்சபா தொகுதியை மட்டுமே ஜேடிஎஸ் வென்றது. 2018-2019 பொதுத் தேர்தலின் போது பிரஜ்வால் தவறான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ததாகக் கூறி, கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்ததால், இப்போது பிரஜ்வல் ரேவண்ணாவின் மக்களவை உறுப்பினர் பதவியும் ஆபத்தில் உள்ளது.

கர்நாடகாவில் லிங்காயத்துகளின் ஆதரவைப் பெற்றுள்ள பாஜக, கர்நாடகாவில் மற்ற ஆதிக்க சாதியான வொக்கலிகாக்கள் மத்தியில் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள ஜேடிஎஸ் உடன் கூட்டணி மூலம் ஆதாயம் பெறலாம் என தேர்தல் கணக்கு போட்டுள்ளது. 

மேலும் படிக்க | G20 Summit: செப்டம்பர் 9 -10 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News