மேற்குவங்கத்தில் அமித்ஷா படம் பதித்த பதாகைகளை அகற்றம்...

மேற்குவங்கத்தில் அமித்ஷாவின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்., பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது!

Last Updated : May 14, 2019, 04:39 PM IST
மேற்குவங்கத்தில் அமித்ஷா படம் பதித்த பதாகைகளை அகற்றம்... title=

மேற்குவங்கத்தில் அமித்ஷாவின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்., பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது!

மக்களவை தேர்தலுக்கான 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்  மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.  

குறிப்பாக பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளும்  மிக பிரமாண்டமான  பொதுக்கூட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அமித் ஷா-வின் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். மேலும் இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில பாஜக-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அமித் ஷா பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்ததை கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் பாஜகவினர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் வைக்கப்பட்டு இருந்து அமித் ஷா படம் பதித்த பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் பரபரப்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News