நிதிஷ் ஜி எங்களுடன் கைகோர்த்தது பாஜகவுக்கு முகத்தில் அறைந்தது போல உள்ளது -தேஜஸ்வி யாதவ்

சோனியா காந்தியை சந்தித்து பேசிய பிறகு தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நாங்கள் ஒன்றாக இணைந்திருப்பது பாஜகவின் முகத்தில் அறைந்தது போன்றது என்றார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 12, 2022, 07:13 PM IST
  • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார் தேஜஸ்வி யாதவ்.
  • பணவீக்கம், இந்து-முஸ்லீம் விரோதம் - பாஜகவுக்கு பீகார் பாடம் கற்பித்துள்ளது.
  • நாட்டில் சர்வாதிகாரம் இருக்கும். அதை தான் பாஜக விரும்புகிறது.
நிதிஷ் ஜி எங்களுடன் கைகோர்த்தது பாஜகவுக்கு முகத்தில் அறைந்தது போல உள்ளது -தேஜஸ்வி யாதவ் title=

புது டெல்லி: பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சந்தித்து பேசினார். பீகாரில் புதிய அரசு அமைந்து, அம்மாநிலத்தின் புதிய துணை முதல்வர் பதவியேற்ற பிறகு சோனியா காந்தியை தேஜஸ்வி யாதவ் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ் ஜி மீண்டும் எங்களுடன் கைகோர்த்திருப்பது பாஜகவின் முகத்தில் அறைந்தது போல அவர்களுக்கு உள்ளது. இந்த அரசு மக்களின் அரசு. பீகார் சட்டசபையில் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகிவிட்டன. இதேபோன்ற நிலை இனி நாடு முழுவதும் அரங்கேறும் என்றார். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, இந்து-முஸ்லீம் விரோதம் போன்ற பிரச்சினைகளில் பாஜகவுக்கு பீகார் பாடம் கற்பித்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சோனியா காந்திக்கு நன்றி. லாலுஜி தனது வாழ்நாள் முழுவதும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் மிரட்டித்தான் பாஜக ஆட்சிக்கு வருகிறது என்றார் தேஜஸ்வி யாதவ். தற்போது பா.ஜ.க.வின் வேலை ஒன்றேஒன்று தான். பயப்படுவோரை பயமுறுத்துவது, யார் விலைபோக தயாராக இருக்கிறார்களோ அவர்களை வாங்குவது. பாஜக ஒவ்வொரு அமைப்பையும் நிறுவனத்தையும் அழித்து வருகிறது. அவர்களின் நிலை காவல் நிலையத்தை விட மோசமாகிவிட்டது. பீகார் மக்களாகிய நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். பிஹாரிகள் விற்பனைக்கு அல்ல, எங்களை விலைக்கு வாங்க முடியாது என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம் என்றார். பாஜக எப்படி பிராந்திய கட்சியை ஒழிக்க விரும்புகிறது என்று ஜேடியு தலைவர் லாலன் சிங் ஒரு விஷயத்தை கூறியுள்ளார். பிராந்தியக் கட்சிகள் முடிவடைந்தால், மாநிலங்களின் எதிர்ப்பு முடிவுக்கு வரும், எதிர்க்கட்சி முடிவுக்கு வந்தால், ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது நாட்டில் சர்வாதிகாரம் இருக்கும். அதை தான் பாஜக விரும்புகிறது. நிதிஷ் ஜி எங்கள் மீது குற்றம் சாட்டினார், நாங்களும் குற்றம் சாட்டினோம். ஆனால் நாங்கள் சோசலிஸ்ட் மக்கள். எனவே நாங்கள் இப்பொழுது ஒன்றாக இருக்கிறோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.

மேலும் படிக்க: என் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லை... -பிரதமர் பதவி குறித்து நிதிஷ்குமார்

அதாவது 2015-ம் ஆண்டு மெகா கூட்டணி ஆட்சியில் காங்கிரஸும் இருந்தது. இந்த நிலையில், பீகாரில் இம்முறையும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. தேஜஸ்வி மற்றும் சோனியா காந்தியின் இந்த சந்திப்பை 2024-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தமாகவே அரசியல் நிபுணர்களும் கருதுகின்றனர். 2024ல் பிரதமர் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சியின் முகமாக நிதிஷ் குமாரை முன்னிறுத்துவதற்கு தேஜஸ்வி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிப்பதாக தெரிகிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி, NDA உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, RJD மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து நிதீஷ்குமார் மாநிலத்தில் புதிய அரசை அமைத்தார். முதல்வர் நிதிஷ் குமாரின் இந்த முடிவுக்குப் பிறகு, பாஜக மற்றும் ஜேடியு, ஆர்ஜேடி இடையே வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: 5-வது முறையாக கூட்டணியில் பிளவு : 8-வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்குமாரின் கதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News