மும்பை: கிறிஸ்டல் டவர் தீ விபத்து; 2 பேர் பலி, 14 பேர் காயம்

மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2018, 11:44 AM IST
மும்பை: கிறிஸ்டல் டவர் தீ விபத்து; 2 பேர் பலி, 14 பேர் காயம் title=

மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து..! 

மும்பையின் உள்ள பரேல் பகுதியில் இன்று காலை கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அனுப்பியதையடுத்து, பத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதை தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டிடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புப்பணி வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ANI செய்தி நிறுவனம் தகவல் படி தீவிபத்தில் சிக்கியுள்ள பலரை மீட்புப்பணி வீரர்கள் கிரானின் மூலம் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

கிறிஸ்டல் டவர் 2-வது பிரிவில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பற்றிய மேலும் தகவல்கள் தெரியவில்லை.   

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு மும்பை கமாலா மில்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது...!

 

Trending News