அந்தமானில் மழை: 800 சுற்றுலா பயணிகள் தவிப்பு

அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ள ஹெவ்லொக் தீவில் மழை மற்றும் புயல் காரணமாக கிட்டத்தட்ட 800 சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இந்திய கடற்படை வீரர்கள் அந்த பயணிகளை மீட்க நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Last Updated : Dec 7, 2016, 12:07 PM IST
அந்தமானில் மழை: 800 சுற்றுலா பயணிகள் தவிப்பு title=

போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ள ஹெவ்லொக் தீவில் மழை மற்றும் புயல் காரணமாக கிட்டத்தட்ட 800 சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இந்திய கடற்படை வீரர்கள் அந்த பயணிகளை மீட்க நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

சிவில் நிர்வாகம் தொலைபேசி வாயிலாக சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்ற உதவி கேட்டுள்ளது.

அந்தமான் தீவுகளில் கனத்த மழை மற்றும் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு ஒன்று சிக்கியுள்ளது. சுமார் 800 சுற்றுலாப்பயணிகள் தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மீட்பு பணிக்கு கடற்படையினர் விரைந்துள்ளனர். 

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் இந்த ஹேவ்லேக் உள்ளது.

Trending News