பேருந்தின் குறுக்கே ஒட்டகம் பாய்ந்ததில் இருவர் பலி!

ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலையில் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்!

Last Updated : Feb 10, 2018, 08:36 PM IST
பேருந்தின் குறுக்கே ஒட்டகம் பாய்ந்ததில் இருவர் பலி! title=

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலையில் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் பகுதி நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் ஒட்டகம் ஒன்று சென்றதால் அதை இடிக்காமல் இருந்து பேருந்து ஓட்டனர் முயற்சித்துள்ளார்.

அப்போது தனது கட்டுப்பாட்டினை இழந்த ஓட்டுனர், பேருந்தினை சாலையோர பள்ளத்தில் இரக்கியுள்ளார். இதனால் பேருந்த நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேர் பயணித்ததாகவும், இவர்களில் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுகையில் வழியில் இறந்ததாகவும், மேலும் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!

Trending News