மாரடைப்புக்கான இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

Heart Attack Risk: மாரடைப்பு அபாயகரமானது என்பதை நிரூபிக்கலாம், எனவே அதன் ஆபத்தை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது அவசியம். மாரடைப்பை எவ்வாறு தவிர்க்கலாம் என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 13, 2022, 09:15 AM IST
  • மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள்
  • மாரடைப்பு ஆபத்து
  • மாரடைப்பு அறிகுறிகள்
மாரடைப்புக்கான இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள் title=

மாரடைப்பு அறிகுறிகள்: இந்தியா உட்பட உலகில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது, மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. பொதுவாக குழப்பமான வாழ்க்கை முறையும், தலைகீழான உணவுப் பழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன் இருப்பவர்கள் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள். இருந்த போதிலும், இதய நோயை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சரியான தகவல் எந்த மனிதனின் உயிரையும் காப்பாற்றும். எனவே மாரடைப்புக்கான இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?
நாம் அதிக எண்ணெய் உணவுகளை சாப்பிட்டு, நமது உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருந்தால், நமது தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக நரம்புகளில் அடைப்பு ஏற்படத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் இதயத்துக்கு இரத்தம் சென்றடைய நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு பிரச்சனை ஏற்படும். எனவே சரியான நேரத்தில் அதன் ஆபத்தை எவ்வாறு கண்டறிவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

1. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
நரம்புகளில் அல்லது இதயத்தைச் சுற்றி இரத்தக் கட்டிகள் உருவாகும்போது, ​​இதயத் துடிப்பு சீரற்றதாக மாறும், பொதுவாக ஆரோக்கியமான வயது வந்தவரின் இதயம் ஒரு நிமிடத்தில் 70 முதல் 72 முறை துடிக்கிறது, இவை ஒழுங்கற்றதாக மாறும்போது மாரடைப்பு ஏற்படலாம். எனவே சரியான நேரத்தில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியமாகும்.

2. சோர்வு
பொதுவாக வேலை செய்த பிறகு அடிக்கடி சோர்வாக உணர்கிறோம், ஆனால் குறைந்த பணிச்சுமை இருந்தபோதிலும் நீங்கள் சோர்வாக உணரத் தொடங்கும் போது, ​​நிச்சயமாக ஏதோ தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது, நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால், உடலின் பல பகுதிகளுக்கு இரத்தம் சரியாகச் செல்ல முடிவதில்லை, இதனால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. 

3. மார்பு வலி
மார்பு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம், இதில் வயிற்றில் வாயு, ஏதேனும் பதற்றம் காரணமாக அசௌகரியம் ஏற்படும். ஆனால் இது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். மார்பு வலி தோள்கள், கைகள் மற்றும் முதுகுக்கும் பரவுகிறது. உங்கள் உடலில் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News